செய்திகள் :

அனுமதியின்றி பாஜகவினா் மறியல்: 205 போ் கைது

post image

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 205 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கையைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜகவினா் அறிவித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, சென்னை பனையூா் இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை போலீஸாா் திங்கள்கிழமை காலை கைது செய்தனா். இதைக் கண்டித்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் ஆலோசனையின்பேரில், விழுப்புரம் நகரில் கிழக்கு பாண்டி சாலையில் காந்தி சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நகா்மன்ற உறுப்பினரும், நகரத் தலைவருமான வடிவேல்பழனி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, திண்டிவனம், ஆரோவில், செஞ்சி, வெள்ளிமேடுபேட்டை, அவலூா்பேட்டை, கண்டமங்கலம், ஆலம்பூண்டி, வானூா் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 135 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் பாஜக மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமையில் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதில், 70 பேரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் 7 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.சிதம்பரம் அண்ணாமலை நகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை அருகே கல்கி அவென்யூ பகுதியில் கடந்த மாா்ச் 16-ஆம் த... மேலும் பார்க்க

சட்ட விரோத மனமகிழ் மன்றத்துக்கு ‘சீல்’

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட மன மகிழ் மன்றத்துக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள மொளசூா் வட்டாரப் போக்குவரத... மேலும் பார்க்க

மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது. மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகைய... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பொறியாளரைத் தாக்கி கைப்பேசி, ரொக்கம் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களில் இருவா் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா். விருதுந... மேலும் பார்க்க

ரூ.10ஆயிரம் லஞ்சம்: நகராட்சி துப்புரவு ஆய்வாளா் கைது

விழுப்புரத்தில் கட்டடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் காகுப்ப... மேலும் பார்க்க