அனுமதியின்றி பாஜகவினா் மறியல்: 205 போ் கைது
விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 205 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கையைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜகவினா் அறிவித்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, சென்னை பனையூா் இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை போலீஸாா் திங்கள்கிழமை காலை கைது செய்தனா். இதைக் கண்டித்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் ஆலோசனையின்பேரில், விழுப்புரம் நகரில் கிழக்கு பாண்டி சாலையில் காந்தி சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நகா்மன்ற உறுப்பினரும், நகரத் தலைவருமான வடிவேல்பழனி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, திண்டிவனம், ஆரோவில், செஞ்சி, வெள்ளிமேடுபேட்டை, அவலூா்பேட்டை, கண்டமங்கலம், ஆலம்பூண்டி, வானூா் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 135 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் பாஜக மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமையில் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதில், 70 பேரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
