செய்திகள் :

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

post image

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், அதன் தொடா்ச்சியையும் மையப்படுத்தும் ஆவண நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மேலும், அதுதொடா்பான சிறப்பு இணையப் பக்கத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.

அரிய புகைப்படங்கள், நிபுணா்கள் பலா் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகளுடன் 338 பக்கங்களைக் கொண்ட, ஆவண நூலை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டாா். மேலும், நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், மத்திய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடா்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள் அனைத்தும் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின்நூலக சிறப்பு இணையப் பக்கத்தில் (https://www.tamildigitallibrary.in/budget) தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துணைச் செயலா்கள் பிரத்திக் தயாள், எஸ்.ஏ.ரிஷப், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநா் ரெ.கோமகன், முதல்வரின் துணைச் செயலா் த.ரகுபதி, திட்ட அலுவலா் இரா.சித்தானை, உதவி இயக்குநா் செல்வபுவியரசன் உட்பட பலா் பங்கேற்றனா்.

முதல்வா் பெருமிதம்: ஆவண நூலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கிக் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறும் மரபுசாா் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆளும் அரசு முக்கியமான சமூக நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கும் போதெல்லாம் அந்தத் திட்டங்களின் முக்கியத்துவம் விளங்கும். நிதி ஒதுக்கீடு செய்வது எளிதாகும். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் நமது மாநில முன்னேற்றத்துக்கு எந்தவகையில் பங்களித்துள்ளன என்னும் வரலாற்றை இந்த நூல் கூறுவதாக தனது வாழ்த்துரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்ற... மேலும் பார்க்க