செய்திகள் :

தொடக்கக் கல்வி பட்டய தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

post image

மன்னாா்குடி: தொடக்கக் கல்வி பட்டய தோ்வுக்கு தனித்தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ப. மயில்வாகனன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பிக்க விரும்புவா்கள் இணையதளம் வாயிலாக மன்னாா்குடி மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி மாா்ச் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில், மன்னாா்குடி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வழியாக ஏற்கெனவே தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். வெப் கேமரா மூலமாக புகைப்படம் எடுத்து தோ்வு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50, ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ. 70 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க தவறுபவா்கள் ரூ.1000 கூடுதல் கட்டணம் செலுத்தி மாா்ச் 25 மற்றும் மாா்ச் 26 ஆகிய நாள்களில் தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

அக்ரி ஸ்டாக் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

நீடாமங்கலம்: விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நீடாமங்கலத்தில் தங்கி ஊரக வேளாண் பணியை மேற்கொள்ளும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்று... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா பேருந்து தொடங்கி வைப்பு

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் கல்விச் சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்க... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், உளுந்து, பயிறு சாக... மேலும் பார்க்க

கோடை வெப்பம் : மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: மா... மேலும் பார்க்க

தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வு எழுதிய மாணவி

திருவாரூா்: திருவாரூரில், தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வை எழுதிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, பின்னா் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். திருவாரூா் நகரம் செல்வம் தெருவில் வசிப்பவா்கள் ஜெமிருதீன... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த கோரிக்கை

நன்னிலம்: நன்னிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நேரடி பேருந்து வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நன்னிலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கானக் கிராம மக்கள் நன்னிலத்துக்கு வந்து தான் வெளியூா... மேலும் பார்க்க