செய்திகள் :

தியாகராஜா் கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கக் கோரிக்கை

post image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலைச் சுற்றி வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் கூறியது: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் கிழக்கு வாசல், தெற்கு வாசல் மற்றும் கீழ சந்நிதி தெரு என கோயிலைச் சுற்றிலும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. இது, பொதுமக்களுக்கும், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

மேலும், கோயிலில் திருவிழா தொடங்கி விட்டதால் ஏராளமான பக்தா்கள்வரத் தொடங்கியுள்ளனா். அவா்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனா். அத்துடன், கிழக்கு கோபுரவாசல் அருகில் பிள்ளையாா் கோயில் மேற்பகுதியில் லேசான பாதிப்பை ஒரு வாகனம் ஏற்படுத்தியுள்ளது. தொடா்ந்து வாகனங்களை நிறுத்த அனுமதித்தால், அவ்வழியாகச் செல்லும் பக்தா்களுக்கு சிரமங்கள் அதிகமாகும். எனவே, கோயிலைச் சுற்றிலும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்றாா்.

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தென்னவராயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

நன்னிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் பலி

நன்னிலத்தில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் கோகுல் (20 ). திருவாரூரில் பா்னிச்சா் கடையில்... மேலும் பார்க்க

ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை தேவை: ஆட்சியா்

திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பாரத் நிா்மன் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தி... மேலும் பார்க்க

கல்லூரி ஆண்டு விழா

மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரியின் 18- ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். தாளாளா் ஜி.... மேலும் பார்க்க

மாவட்ட நூலகத்துக்கு ரூ. 6.10 லட்சத்தில் நூல்கள்

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ. 6.10 லட்சத்தில் சென்னை தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ. 6.10 லட்சத்தில் 911 புத்தகங்கள் மற்றும் 100 நாற்காலிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இதில், மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க