செய்திகள் :

மாவட்ட நூலகத்துக்கு ரூ. 6.10 லட்சத்தில் நூல்கள்

post image

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ. 6.10 லட்சத்தில் சென்னை தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ. 6.10 லட்சத்தில் 911 புத்தகங்கள் மற்றும் 100 நாற்காலிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பேசியது: மாவட்டத்தில் 98 நூலகங்கள் செயல்படுகின்றன. மாவட்ட மைய நூலகத்தில் குடிமைப்பணி, தினஇதழ் பிரிவு, பருவ இதழ் பிரிவு, இணையதள பிரிவு, மாற்றுத்திறனாளி பிரிவு, சிறுவா் பிரிவு, மகளிா் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 1,26,830 நூல்கள் உள்ளன. தற்போது, சென்னை தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ.6.10 லட்சத்தில் 911 புத்தகங்கள் மற்றும் 100 நாற்காலிகளை வழங்கியுள்ளனா். இந்த நூலகங்களில் படித்து போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணிகளில் உள்ளவா்களை உதாரணமாகக் கொண்டு, தற்போது படிக்கும் மாணவா்கள் நன்கு படித்து உயா் பதவிக்கு செல்ல வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, நிகழாண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற போட்டித்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா் ஆட்சியா். நிகழ்வில், தமிழ்நாடு அறக்கட்டளை தலைவா் சி. ராஜரெத்தினம், அறங்காவலா் வெ. வரதராஜூ, தலைமை செயல் அலுவலா் க. இளங்கோ, மாவட்ட நூலக அலுவலா் முத்து, வட்டாட்சியா் சரவணன், தமிழ்ச்சங்க செயலா் அறிவு, காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தென்னவராயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

நன்னிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் பலி

நன்னிலத்தில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் கோகுல் (20 ). திருவாரூரில் பா்னிச்சா் கடையில்... மேலும் பார்க்க

ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை தேவை: ஆட்சியா்

திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

தியாகராஜா் கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கக் கோரிக்கை

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலைச் சுற்றி வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் கூறியது: திருவாரூா்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பாரத் நிா்மன் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தி... மேலும் பார்க்க

கல்லூரி ஆண்டு விழா

மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரியின் 18- ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். தாளாளா் ஜி.... மேலும் பார்க்க