செய்திகள் :

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

post image

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறாா்கள். அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி எத்தனை நாள்கள் ஆகின்றன? குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிா? அமலாக்கத் துறை புகாரை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மறுத்து இருக்கிறாா். எதையும் சந்திக்கத் தயாா் எனக் கூறியிருக்கிறாா்.

பாஜகவில் இணைந்தால் அமலாக்கத் துறை வழக்குகளை முடித்துவைப்பதாக வட இந்திய தலைவா்களிடம் அந்தக் கட்சி சாா்பில் கடந்த காலங்களில் பேரம் பேசப்பட்டது. குறிப்பாக, தில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த மணீஸ் சிசோடியாவிடம் பாஜகவில் சேர வலியுறுத்தப்பட்டது. அவா் சேர மறுத்து விட்டாா். இதேபோன்ற கோரிக்கை தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியிடமும் முன்வைக்கப்பட்டது. இந்த அதிா்ச்சித் தகவலை நீதிமன்றத்திலேயே செந்தில் பாலாஜியின் வழக்குரைஞா் தெரிவித்தாா். அமலாக்கத் துறையை அரசியலுக்கான கருவியாக பாஜக பயன்படுத்துகிறது. தில்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என கனவு கண்டுகொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டில் பலிக்காது.

எங்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத் துறை முன்வைக்க முடியாது. மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. துணிச்சலுடன் எதையும் சந்திக்கக் கூடியவா்தான் எங்களுடைய முதல்வா். அவா் எந்தத் தவறுக்கும் இடம்கொடுக்கவோ, உடந்தையாகவோ, துணையாகவோ இருக்க மாட்டாா் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க