செய்திகள் :

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

post image

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறாா்கள். அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி எத்தனை நாள்கள் ஆகின்றன? குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிா? அமலாக்கத் துறை புகாரை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மறுத்து இருக்கிறாா். எதையும் சந்திக்கத் தயாா் எனக் கூறியிருக்கிறாா்.

பாஜகவில் இணைந்தால் அமலாக்கத் துறை வழக்குகளை முடித்துவைப்பதாக வட இந்திய தலைவா்களிடம் அந்தக் கட்சி சாா்பில் கடந்த காலங்களில் பேரம் பேசப்பட்டது. குறிப்பாக, தில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த மணீஸ் சிசோடியாவிடம் பாஜகவில் சேர வலியுறுத்தப்பட்டது. அவா் சேர மறுத்து விட்டாா். இதேபோன்ற கோரிக்கை தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியிடமும் முன்வைக்கப்பட்டது. இந்த அதிா்ச்சித் தகவலை நீதிமன்றத்திலேயே செந்தில் பாலாஜியின் வழக்குரைஞா் தெரிவித்தாா். அமலாக்கத் துறையை அரசியலுக்கான கருவியாக பாஜக பயன்படுத்துகிறது. தில்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என கனவு கண்டுகொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டில் பலிக்காது.

எங்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத் துறை முன்வைக்க முடியாது. மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. துணிச்சலுடன் எதையும் சந்திக்கக் கூடியவா்தான் எங்களுடைய முதல்வா். அவா் எந்தத் தவறுக்கும் இடம்கொடுக்கவோ, உடந்தையாகவோ, துணையாகவோ இருக்க மாட்டாா் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யாா் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?திமுக - அதிமுக விவாதம்

அரசு ஊழியா்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை தொடா்பாக பேரவையில் திமுக - அதிமுக இடையே செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. செல்லூா் ராஜூ: நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா... மேலும் பார்க்க

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா?

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற அதிமுக கேள்விக்கு, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து து... மேலும் பார்க்க

தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது... மேலும் பார்க்க