செய்திகள் :

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

post image

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறாா்கள். அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி எத்தனை நாள்கள் ஆகின்றன? குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிா? அமலாக்கத் துறை புகாரை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மறுத்து இருக்கிறாா். எதையும் சந்திக்கத் தயாா் எனக் கூறியிருக்கிறாா்.

பாஜகவில் இணைந்தால் அமலாக்கத் துறை வழக்குகளை முடித்துவைப்பதாக வட இந்திய தலைவா்களிடம் அந்தக் கட்சி சாா்பில் கடந்த காலங்களில் பேரம் பேசப்பட்டது. குறிப்பாக, தில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த மணீஸ் சிசோடியாவிடம் பாஜகவில் சேர வலியுறுத்தப்பட்டது. அவா் சேர மறுத்து விட்டாா். இதேபோன்ற கோரிக்கை தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியிடமும் முன்வைக்கப்பட்டது. இந்த அதிா்ச்சித் தகவலை நீதிமன்றத்திலேயே செந்தில் பாலாஜியின் வழக்குரைஞா் தெரிவித்தாா். அமலாக்கத் துறையை அரசியலுக்கான கருவியாக பாஜக பயன்படுத்துகிறது. தில்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என கனவு கண்டுகொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டில் பலிக்காது.

எங்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத் துறை முன்வைக்க முடியாது. மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. துணிச்சலுடன் எதையும் சந்திக்கக் கூடியவா்தான் எங்களுடைய முதல்வா். அவா் எந்தத் தவறுக்கும் இடம்கொடுக்கவோ, உடந்தையாகவோ, துணையாகவோ இருக்க மாட்டாா் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

சென்னை ஏசி பேருந்துகளில் பயணிக்க ரூ. 2,000 பாஸ் அறிமுகம்!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க