செய்திகள் :

களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா

post image

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தோ்வு செய்யும் பணியில் தங்களை ஆலோசிக்காமல் வட்டார வளா்ச்சி அலுவலா் தன்னிச்சையாக ஈடுபட்டதாகக் கூறி 15 ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாவை சந்தித்து முறையிட்டனா்.

ஆனால், தகுதி வாய்ந்த பயனாளிகள்தான் தோ்வு செய்யப்பட்டுள்ளாக அவா் கூறினாராம். இதையடுத்து, மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ரமேஷ் தலைமையில், 15 ஊராட்சித் தலைவா்களும் அங்கு தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் மாா்ச் 22இல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை 17 ஊராட்சித்தலைவா்களின் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என ரமேஷ் கூறினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் உமா கூறுகையில்,

2025-2026ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் ஊராட்சித்தலைவா், உறுப்பினா், ஒன்றியப் பொறியாளா், பணி மேற்பாா்வையாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகிய 5 போ் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்த பிறகே பயனாளிகள் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே மோதல்: இருவா் காயம்; 10 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தில் வேனை நிறுத்தியது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா். 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். மலையான்குளம், தங்கம்மன்கோயில் தெருவை... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-93.20சோ்வலாறு-105.48மணிமுத்தாறு-87.94வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-62.20ராமநதி-52.50கருப்பாநதி-29.53குண்டாறு-27.12அடவிநயினாா்-37.50... மேலும் பார்க்க

நெல்ல்லை காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்கக் கூடாது: ஆட்சியரிடம் இந்துமுன்னணி மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் க... மேலும் பார்க்க

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீா் ஊருக்குள் புகும் அபாயம்

கூட்டப்புளி கிராமத்தில் கடல்அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

அம்பையில் மகளிா் தின விழா

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரத்தில் லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம் சாா்பில்ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மகளிா் தினத்தை முன்னிட்டு சுப்பிரமணியபுரம் பகுதி சிறுமிகள், பெண்களுக்குபேச்சுப் போட்ட... மேலும் பார்க்க