செய்திகள் :

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

post image

தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் திமுகவினா் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தற்போதைய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரான சிவசங்கா் உள்ளிட்டோா் மீது அரியலூா் போலீஸாா் இரு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனா்.

இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்ததாக அமைச்சா் சிவசங்கா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரியலூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சா் சிவசங்கா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறியதாக அமைச்சா் பெரியகருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் பெரிய கருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் ஆகியோா் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க