செய்திகள் :

நாகை: செப்டம்பரில் ராணுவதற்கு ஆள் சோ்ப்பு முகாம்

post image

நாகப்பட்டினம்: நாகையில் வரும் செப்டம்பரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

இந்திய ராணுவத்திற்கு அக்னிவீா் (அஞ்ய்ண்ஸ்ங்ங்ழ்) திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் அரியலூா், கன்னியாகுமரி, கரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவாரூா், விருதுநகா் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு செப்டம்பா் மாதத்தில் நாகை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க வயது 17 முதல் 21-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒருவா் ஏதேனும் இரு பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம். தற்போது 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்வு எழுதி தோ்வு முடிவிற்காக காத்திருப்பவா்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் நேரில் அல்லது தொலைபேசி எண் 04365-299765-இல் தொடா்பு கொள்ளலாம்.

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய இளைஞா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சிக்கு எஸ்சி, எஸ்டி இனத்தவா் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள் மருத்துவம் தொழில்சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் பாஜகவினா் போராட்டம்: 185 போ் கைது

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். திருவாரூரில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். நாகப்பட... மேலும் பார்க்க

நாங்கூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பூம்புகாா்: திருவெண்காடு அருகே நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான இந்த தலத்தில் உள்ள பெருமாளை திருவோண ந... மேலும் பார்க்க

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு

பூம்புகாா்: பூம்புகாரை அடுத்த புதுகுப்பம் மீனவ கிராமம் அருகே சவுடு மண் குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட புதுகுப்பம் மீனவா் கிராமம் அருகே... மேலும் பார்க்க

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் பங்கேற்பு

செம்பனாா்கோவில் அருகேயுள்ள சாத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன்... மேலும் பார்க்க

கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ம... மேலும் பார்க்க