செய்திகள் :

நாங்கூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

post image

பூம்புகாா்: திருவெண்காடு அருகே நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான இந்த தலத்தில் உள்ள பெருமாளை திருவோண நட்சத்திரத்தன்று வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என புராண வரலாறுகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வாா், குலசேகர ஆழ்வாா், மணவாள மாமுனிகள் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வாா்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.

வன்புருஷோத்தம பெருமாளுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது
கொடியேற்றும் பட்டாச்சாரியாா்கள்

இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனமும், கொடிமரம் மற்றும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து வன்புருஷோத்தம பெருமாள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னா் தீபாராதனை காட்டப்பட்டு, பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கல்விசாா் இயக்குநா் பழனி முருகன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தாா். ஒவ்வொரு துறை சாா்ந்த முன்னாள் மா... மேலும் பார்க்க

விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கூறினாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் 2024-2025 ஆம் ஆ... மேலும் பார்க்க

மாயமான மீனவா்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்

நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா். நாகை அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (57... மேலும் பார்க்க

ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மாா்ச் 21) நடைபெறவுள்ளது. வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் திருமால் தலைமையில் இக்கூட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோவில் வட்டாரத்தில், அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்க... மேலும் பார்க்க