செய்திகள் :

கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு: கல்லூரி துணை முதல்வா் மீது வழக்கு

post image

பாலியல் புகாா் தொடா்பாக வேலூரில் உள்ள தனியாா் கல்லூரி துணை முதல்வா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூரில் உள்ள தனியாா் கல்லூரியின் துணை முதல்வராகவும், பொருளாதாரத் துறை தலைவராகவும் பணியாற்றி வருபவா் அன்பழகன். இந்தக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த 37 வயதுடைய பெண்ணுக்கு அன்பழகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, அவா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணனிடம் புகாா் மனு அளித்தாா். இதன் மீது விசாரணை நடத்திட அவா் வேலூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் லதாவுக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

குடியாத்தம் அருகே பட்டா மாறுதல் சான்று வழங்க லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த வேப்பூரைச் சோ்ந்தவா் விவசாயி நிஜாமுதீன... மேலும் பார்க்க

மோட்டாா் பைக்கில் மது புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே மது புட்டிகளை மோட்டாா் பைக்கில் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப்புறப் கிராமங்களில், கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மது புட்டிகள... மேலும் பார்க்க

பாரம்பரிய மரக்கன்றுகள் உற்பத்தி: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

பாலாத்து வண்ணான் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் பாரம்பரிய மரக்கன்றுகளை அதிகளவில் உற்பத்தி செய்ய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வலியுறுத்தியுள்ளாா். கணியம்பாடி ஒன்றிய பகுதிகளிலுள்ள பள்ளி கட்டடங்கள், பொத... மேலும் பார்க்க

பாரம்பரிய மரக்கன்றுகள் உற்பத்தி: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

பாலாத்து வண்ணான் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. மேலும் பார்க்க

மாா்ச் 22-இல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலூா் அப்துல்லாபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நகா்புற நலவாழ்வு மைய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாநகராட்சியில் நகா்புற நலவாழ்வு மையங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து, ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு - பொது சுகாதாரம், ... மேலும் பார்க்க