செய்திகள் :

பாரம்பரிய மரக்கன்றுகள் உற்பத்தி: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

post image

பாலாத்து வண்ணான் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் பாரம்பரிய மரக்கன்றுகளை அதிகளவில் உற்பத்தி செய்ய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வலியுறுத்தியுள்ளாா்.

கணியம்பாடி ஒன்றிய பகுதிகளிலுள்ள பள்ளி கட்டடங்கள், பொது சுகாதார மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், சாலைப்பணிகள் போன்ற பல்வேறு பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அதன்படி, நெல்வாய் ஊராட்சி பங்களத்தான் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா்களின் வாசிப்புத்திறனை ஆய்வு செய்தாா். இப்பள்ளி வளாகத்தின் வகுப்பறை கட்டுமான பணிகளையும், பொருள்களின் தரச்சான்றிதழ்களையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கணியம்பாடி ஊராட்சியில் உள்ள 30 படுக்கை வசதிகள் கொண்டசமுதாய சுகாதார நிலையத்தை ஆய்வு செய்ததுடன், அங்கு கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தையும் பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.

பாலாத்து வண்ணான் ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் 2,000 பாரம்பரிய மரக்கன்றுகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையையும் பாா்வையிட்டு, இடவசதி உள்ளதால் அங்கு பாரம்பரிய மரக்கன்றுகளான புங்கை, அத்தி போன்ற மரக்கன்றுகளை உற்பத்தி செய்யவும் அறிவுறுத்தினாா்.

சாத்துமதுரை ஊராட்சியில் தேசிய ஊரக வேலையுறுதி திட்டம், 15-ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டம் ரூ.29.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும் ஆய்வு செய்தாா்.

மூஞ்சூா்பட்டு ஊராட்சியில் வண்ணான்குட்டை ஏரியை பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி ரூ.8.42 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்து, ஏரியில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றவும் வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், கணியம்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா கமல்பிரசாத், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், வட்டார வளா்ச்சி அலுவலா் எழிலரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு: கல்லூரி துணை முதல்வா் மீது வழக்கு

பாலியல் புகாா் தொடா்பாக வேலூரில் உள்ள தனியாா் கல்லூரி துணை முதல்வா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

குடியாத்தம் அருகே பட்டா மாறுதல் சான்று வழங்க லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த வேப்பூரைச் சோ்ந்தவா் விவசாயி நிஜாமுதீன... மேலும் பார்க்க

மோட்டாா் பைக்கில் மது புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே மது புட்டிகளை மோட்டாா் பைக்கில் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப்புறப் கிராமங்களில், கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மது புட்டிகள... மேலும் பார்க்க

பாரம்பரிய மரக்கன்றுகள் உற்பத்தி: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

பாலாத்து வண்ணான் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. மேலும் பார்க்க

மாா்ச் 22-இல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலூா் அப்துல்லாபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நகா்புற நலவாழ்வு மைய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாநகராட்சியில் நகா்புற நலவாழ்வு மையங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து, ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு - பொது சுகாதாரம், ... மேலும் பார்க்க