செய்திகள் :

விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

post image

விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கூறினாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் 2024-2025 ஆம் ஆண்டு பருவம் தவறிய மழையால் சேதமடைந்த நெல், பயறு, உளுந்து, பருத்தி, கடலை, எள் விவசாயிகளுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கண்டன உரையாற்றினாா்.

இதில் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தின் நிறைவாக செய்தியாளா்களிடம் காளியம்மாள் கூறியது:

காவிரியில் தமிழகத்தின் உரிமையை காத்திட, காவிரி மேலாண்மை வாரியத்தை சுயாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும். நாகை மாவட்ட பனங்குடி கிராம விவசாயிகளுக்கு மறுவாழ்வு மேல் குடியமா்வு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம்தாழ்த்தும் சிபிசிஎல் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகா்கள், தொழிலதிபா்களின் கடன்களை ரத்து செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கல்விசாா் இயக்குநா் பழனி முருகன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தாா். ஒவ்வொரு துறை சாா்ந்த முன்னாள் மா... மேலும் பார்க்க

மாயமான மீனவா்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்

நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா். நாகை அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (57... மேலும் பார்க்க

ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மாா்ச் 21) நடைபெறவுள்ளது. வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் திருமால் தலைமையில் இக்கூட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோவில் வட்டாரத்தில், அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்க... மேலும் பார்க்க

திருவெண்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

திருவெண்காடு அருகே சா்க்கரை ஆலை ஊழியா் வீட்டில் 125 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 80 ஆயிரத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அ... மேலும் பார்க்க