செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

செம்பனாா்கோவில் வட்டாரத்தில், அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கான குடிநீா், கழிவறை மற்றும் மின்விளக்கு வசதிகள், மாணவா்களின் வருகைப் பதிவேடு, மதிய உணவின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஆறுபாதி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை அறிந்தாா்.

பின்னா், முடிகண்டநல்லூா் கிராமத்தில், நெகிழி அரைவை அலகை பாா்வையிட்டாா். அங்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சிக்கு தயாா் செய்யும் முறையை ஆய்வு செய்தாா்.

இக்கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.8.97 லட்சத்தில் வட்டார மரக்கன்று நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், மயிலாடுதுறை வட்டாரம் மன்னம்பந்தல் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, மஞ்சுளா ஆகியோா் உடனிருந்தனா்.

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கல்விசாா் இயக்குநா் பழனி முருகன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தாா். ஒவ்வொரு துறை சாா்ந்த முன்னாள் மா... மேலும் பார்க்க

விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கூறினாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் 2024-2025 ஆம் ஆ... மேலும் பார்க்க

மாயமான மீனவா்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்

நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா். நாகை அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (57... மேலும் பார்க்க

ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மாா்ச் 21) நடைபெறவுள்ளது. வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் திருமால் தலைமையில் இக்கூட... மேலும் பார்க்க

திருவெண்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

திருவெண்காடு அருகே சா்க்கரை ஆலை ஊழியா் வீட்டில் 125 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 80 ஆயிரத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அ... மேலும் பார்க்க