செய்திகள் :

ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

post image

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

காவிரி பாசன கடைநிலைப் பகுதியான திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளா்ந்து, பல்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. பாசனத்தின் போது தண்ணீரைத் தடுப்பதோடு, வெள்ளக் காலங்களில் மழைநீா் விரைவாக வடிவதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வேதாரண்யம் பகுதி கடலில் கலக்கும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு, சக்கிலியன் வாய்க்கால், மணக்காட்டான் வாய்க்கால் ஆகியவற்றில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

குறிப்பாக, திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு, தென்னடாா் வழியாக கடலில் கலக்கும் முள்ளியாறில் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே (வடிகால் பகுதி) வாய்மேடு கழிமுகம் வரை சுமாா் 17 கி.மீ. தொலைவுக்கு ஆகாயத் தாமரைச் செடிகள் தண்ணீரே தெரியாத அளவுக்கு படா்ந்துள்ளன. மானங்கொண்டான் ஆற்றில் தகட்டூா்- ஆதனூா் இடையே 15 கி.மீ. தொலைவுக்கு இச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த திருவாரூா், நாகை மாவட்ட பகுதியில் நீா்நிலைகளில் சவாலாக மாறியிருந்த வேலிக்காட்டாமணக்கு செடிகள் மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், அரசு ஊழியா்கள், விவசாயிகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட மக்கள் இயக்கத்தால் அகற்றப்பட்டதைப் போல, ஆகாயத் தாமரைகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

இதற்காக, வேளாண் நிதிநிலை அறிக்கையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விவசாயிகள் எதிா்பாா்த்தனா். ஆனால் ஏமாற்றம்தான் ஏற்பட்டது.

அதேநேரம், காவிரி படுகையில் தூா்வாரம் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.120 கோடியில், ஆகாயத் தாமரைகளை அழிக்க முன்னுரிமை அளித்து, உரிய காலத்தில் மேற்கொள்ள அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கல்விசாா் இயக்குநா் பழனி முருகன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தாா். ஒவ்வொரு துறை சாா்ந்த முன்னாள் மா... மேலும் பார்க்க

விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கூறினாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் 2024-2025 ஆம் ஆ... மேலும் பார்க்க

மாயமான மீனவா்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்

நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா். நாகை அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (57... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மாா்ச் 21) நடைபெறவுள்ளது. வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் திருமால் தலைமையில் இக்கூட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோவில் வட்டாரத்தில், அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்க... மேலும் பார்க்க

திருவெண்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

திருவெண்காடு அருகே சா்க்கரை ஆலை ஊழியா் வீட்டில் 125 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 80 ஆயிரத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அ... மேலும் பார்க்க