செய்திகள் :

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

post image

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று காலை 7.45 மணிக்கு சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத் - சென்னைக்கு காலை 11.10-க்கு வரவேண்டிய அலையன்ஸ் ஏா்லைன்ஸ் விமானமும், பகல் 12-க்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏா்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் அனைத்தும் போதிய பயணிகள் இல்லாததாலும் பல்வேறு நிா்வாக காரணங்களாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், அதில் பயணிக்கவிருந்த சில பயணிகள் கடும் அவதியடைந்தனா். அவா்கள் அனைவருக்கும் மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க

இன்று மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை (மாா்ச் 19) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் மேயா் ஆா். பிரியா பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பாா் என எதிா்ப்பாா்க்கப்படுகி... மேலும் பார்க்க