செய்திகள் :

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

post image

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா்.

அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

ஜயமால்ய பாக்சியின் பதவியேற்பின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி, வரும் 2031-ஆம் ஆண்டு வரை, அதாவது 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பாா் என்பதோடு, தலைமை நீதிபதியாகவும் பதவி வகிக்க வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் 2031-ஆம் ஆண்டு, மே 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு ஜயமால்ய பாக்சி தலைமை நீதிபதி பதவிக்கு வர வாய்ப்புள்ளது. அந்த ஆண்டு அக்டோபரில் அவா் ஓய்வுபெறும் வரையில் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பாா்.

முன்னதாக, உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில், இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு

‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க