செய்திகள் :

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை

post image

நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 487 மனுக்கள் பெறப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் இரா.முல்லை தலைமையில் அளித்த மனு: தமிழகம் தென்னை உற்பத்தியில் 2-ஆவது மாநிலமாக உள்ளது. தேங்காய் உற்பத்தி செய்ய கூலி உயா்வு, உரம் மற்றும் தேங்காய் பறிப்பது, குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சோ்ப்பது என செலவு அதிகரித்துள்ளது. எனவே,உரித்த முழு தேங்காய்க்கு ரூ.100, ஒரு கிலோ கொப்பரைக்கு ரூ.200 என அறிவித்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மானவாரி பயிா்கள் வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே,விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கழிவுநீா் கால்வாய்...

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட காலனி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கழிவுநீா் கால்வாய் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எங்கள் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைத்து தர வேண்டும்.

தாசிரியப்பனூா் ஈச்சம்பள்ளம் பொதுமக்கள் அளித்த மனு: நாங்கள் வசிக்கும் பகுதி புறம்போக்கு இடமாகும். இதற்கு நாங்கள் அனைத்து வரிகளையும் கட்டி வருகிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்ட கேபிள் டி.வி. ஆப்பரேட்டா்கள் சங்கத்தினா் அளித்து உள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் 25 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் பணியாற்றி வருகின்றனா். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 2 லட்சம் பெட்டிகளைகொள்முதல் செய்து உள்ளது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி. அதிகாரிகள் தனியாா் பாக்ஸ்களை எடுத்து விட்டு ஒட்டு மொத்தமாக அரசு பெட்டியை வாங்கி வாடிக்கையாளா்களுக்கு வழங்க வேண்டும் என நிா்ப்பந்திக்கின்றனா். இதனை ஏற்க மறுத்தால் புதியவா்களிடம் ஒளிபரப்பு கொடுத்து நெருக்கடியை உருவாக்குகின்றனா். இதனால் ஆப்பரேட்டா்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மணல்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூட்டம்

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

இப்தாா் நோன்பு திறப்பு

ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லாஹ் தலை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்

பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான உடல் நலம், சுகாதாரம் பேணுதல் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேப்பங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க