செய்திகள் :

WPL : 'தொடர்ச்சியாக மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வி'- மனமுடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மெக் லேனிங்

post image

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு டெல்லி கேப்டன் மெக் லேனிங் மனமுடைந்து பேசியிருக்கிறார்.

Delhi Capitals

மெக் லேனிங் பேசுகையில், 'நாங்கள் இன்னொரு நல்ல சீசனை விளையாடினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய போட்டியில் மீண்டும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

மும்பை அணிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், ஏனென்றால் அவர்கள் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். மிகவும் சிறப்பாகச் அனைத்து பணிகளையும் செய்தார்கள். எங்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக, பேட்டிங்கில் நாங்கள் சரியாகச் செயல்படவில்லை. 150 ரன்களை சேசிங் செய்வது என்பது எங்களுக்கு ஒரு நல்ல இலக்காக தான் இருந்தது. ஓரிரு ஓவர்களுக்கு இன்னும் ஒரு பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். எங்கள் அணியை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாங்கள் ஒரு நல்ல சீசனை விளையாடியுள்ளோம். சில நல்ல தருணங்களைக் கடந்து வந்துள்ளோம். ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றமடைந்துவிட்டோம். இன்றிரவு மும்பை எங்களுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் எங்கள் சிறந்த செயல்திறனை நாங்கள் கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால் அது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இது கிரிக்கெட், இதில் யாருடைய தவறும் இல்லை.

Meg Lanning

யாரையும் குறை கூற முடியாது. நாங்கள் முடிந்தவரை சிறப்பாகச் விளையாடத் தயாராக இங்கு வந்தோம். எங்களுக்கு அது நடக்கவில்லை. வெற்றி பெற ஒரு நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் விளையாட்டில் சிலவற்றில் வெற்றிக் கொள்வோம், சிலவற்றில் தோல்வி அடைவோம். இது விளையாட்டில் நடப்பதுதான்.' என்றார்.

Raina: `Mr.IPL பட்டம் ஒன்னும் சும்மா கொடுக்கல' - ரெய்னாவின் அந்த ஆட்டம் நினைவிருக்கிறதா?

கடந்த 17 சீசன்களில் ஐ.பி.எல் எவ்வளவோ மாற்றங்களை பார்த்துவிட்டது. சீசனுக்கு சீசன் பேட்டர்கள் அதிரடியாக ஆடும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சீசனில் ஹெட்டும் அபிஷேக்கும் சேர்ந்து சன்ரைசர்ஸூ... மேலும் பார்க்க

Virat Kohli: "சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?" - கோலி விளக்கம்

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தயாரிப்புகள் மிகவும் விமரிசையாக நடந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தங்களது அணியினருடன் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நேற்று ஆர்சிபி அணியின் நிகழ்ச்சி ஒன்... மேலும் பார்க்க

Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேசியது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் விராட் கோலி. 36 வயதாகும் இவர் ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், மற்றொரு ஆஸ்திரெலிய டூர் தனக்குச் சாத்தியப்படாம... மேலும் பார்க்க

WPL 2025: இறுதிவரைப் போராடிய டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனைகள்... மீண்டும் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அ... மேலும் பார்க்க

Varun Chakravarthy: "போனில் மிரட்டல்கள் வந்தன" - கரியரின் இருண்ட காலம் குறித்து மனம் திறந்த வருண்!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்புவாய்ந்த ஸ்பின் பௌலர் வருண் சக்கரவர்த்தி. கடந்த 2021ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் சரியாக செயல்படாததால் எதிர்கொண்ட மிரட்டல் அழைப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட... மேலும் பார்க்க

IPL 2025: கடந்த 10 ஆண்டுகளில் அதிக முறை ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள்... முதலிடத்தில் `UNSOLD’ வீரர்!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு பிறந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் முதல் அன்கேப்பட் பிளேயராக களமிறங்கும் தோனி வரை பல்வேறு சுவாரஸ்யங்களுக்... மேலும் பார்க்க