செய்திகள் :

Varun Chakravarthy: "போனில் மிரட்டல்கள் வந்தன" - கரியரின் இருண்ட காலம் குறித்து மனம் திறந்த வருண்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்புவாய்ந்த ஸ்பின் பௌலர் வருண் சக்கரவர்த்தி. கடந்த 2021ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் சரியாக செயல்படாததால் எதிர்கொண்ட மிரட்டல் அழைப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மோசமான மனநிலை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் வருண், தனக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததாகவும், விமான நிலையத்திலிருந்து பின் தொடரப்பட்டதாகவும், சிலர் தனது வீட்டைக் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார்.

Varun

வருண் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி பெற்ற பெயரை உலகக் கோப்பையில் காப்பாற்றத் தவறினார். இந்தியா சூப்பர் 12 ஸ்டேஜிலேயே தொடரிலிருந்து வெளியேறியது.

வருண் அந்த தொடரில் ஒரு விக்கெட்கூட எடுக்கவில்லை. பேட்டியில், அப்போது அவர் மீது அதிகப்படியான அழுத்தம் இருந்ததாகக் கூறியுள்ளார். அதுதான் தனக்கு மிகவும் இருண்ட காலம் என்றும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

Varun Chakravarthy பேசியது...

கோபிநாத் உடனான சமீபத்திய பாட்காஸ்டில், "2021 உலகக்கோப்பை எனக்கு மிகவும் இருண்ட காலம். அப்போது நான் மன அழுத்தத்தில் வீழ்ந்தேன். இவ்வளவு ஹைப் கொடுத்து அணியில் சேர்த்தனர், ஆனால் ஒரு விக்கெட்கூட எடுக்க முடியாதது வருத்தமாக இருந்தது. அடுத்த 3 ஆண்டுகள் செலக்‌ஷனில் நான் இல்லை.

varun

முதல்முறை இந்திய அணியில் இடம்பெற்றதை விட கம்பேக் கொடுப்பது கடினமானதாக இருந்தது. என்னைப் பற்றிய பல விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. தினசரி பயிற்சிகள், ரொட்டீன் எல்லாவற்றையும் மாற்றினேன். அதிகப்படியாக பயிற்சி செய்தேன். ஆனால் மீண்டும் அணியில் கூப்பிடுவார்களா என்றுகூட தெரியாமல் பயிற்சி செய்தேன்.

நல்லபடியாக ஐபிஎல் வெற்றிபெற்றோம். அதனால் மீண்டும் அணிக்குள் வந்தேன்." என்றார்.

மேலும் அவர் எதிர்கொண்ட மிரட்டல்கள் குறித்து, "2021 உலகக்கோப்பைக்குப் பிறகு மிரட்டல் அழைப்புகள் வந்தது. 'இந்தியா வந்திடாதே, உள்ள வரவிட மாட்டோம்' என மிரட்டினர். ஏர்போர்டில் இருந்து பைக்கில் இரண்டுபேர் வீடுவரை ஃபாலோ செய்தனர்...." எனக் கூறினார்.

சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி, 3 போட்டிகளில் மட்டுமே கலந்துகொண்டு 9 விக்கெட்கள் வீழ்த்தினார். வரும் மார்ட் 21ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2025ல் இவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

IPL 2025: கடந்த 10 ஆண்டுகளில் அதிக முறை ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள்... முதலிடத்தில் `UNSOLD’ வீரர்!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு பிறந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் முதல் அன்கேப்பட் பிளேயராக களமிறங்கும் தோனி வரை பல்வேறு சுவாரஸ்யங்களுக்... மேலும் பார்க்க

`Mr. Fix-lt-னா அது இவருதான்' - கே.எல் ராகுலைப் புகழ்ந்த மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்... மேலும் பார்க்க

IPL 2025: நெருங்கும் ஐபிஎல் தொடர்; பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்! - வெளியான தகவல் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் நான்குப் போட்டிகளில் பு... மேலும் பார்க்க

``நாடு திரும்பக் கூடாதுனு சொன்னாங்க, கொலை மிரட்டல் எல்லாம் வந்திருக்கு..'' - வருண் சக்ரவர்த்தி டாக்

2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஆடியிருந்தார். ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அதே துபாயில் ந... மேலும் பார்க்க

Axar Patel: `கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் இங்குதான்.!’ - DC அணியின் புதிய கேப்டன் அக்சர் படேல்

இந்தியகிரிக்கெட்ஆல்ரவுண்டர்அக்சர்படேலை, வரும்ஐபில்தொடருக்கு தங்கள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது டெல்லிகேபிட்டல்ஸ்.அதிக எதிர்பார்ப்புகள் நிலவும் இந்த சீசனில் புதியசகாப்தத்தைத்தொடங்கியுள்ளது டெல்லிகே... மேலும் பார்க்க

``ICC என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சிலா?'' - ICC முடிவுகளை கண்டித்த ஜாம்பவான்கள்!

வெஸ்ட்இண்டிஸ்அணியின் முன்னால்லெஜண்டரிவேகப்பந்து வீச்சாளர் ஆண்டிராபர்ட்ஸ், இந்தியாவுக்கு சாதகமாகசாம்பியன்ஸ்டிராபிதொடரில் அனைத்து போட்டிகளையும் இந்திய வீரர்கள் ஒரே மைதானத்தில் விளையாடியதைக்கண்டித்துள்ளா... மேலும் பார்க்க