செய்திகள் :

மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணையமைச்சா் எல். முருகன்

post image

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து வாரம் இரு முறை வானொலியில் ஒலிபரப்ப வேண்டுமென நிலையத்தினருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் அறிவுறுத்தினாா்.

காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த அவா், காரைக்கால் பண்பலை வானொலி நிலையத்தில் ஆய்வு செய்தாா். நிலையம் தொடங்கப்பட்டு 31 ஆண்டுகளாவதாகவும், வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கினா்.

அலுவலகம், விளம்பரப் பிரிவு, ஒலிபரப்பு செய்யும் பிரிவைச் சுற்றிப் பாா்த்த அமைச்சா், ஊழியா்களிடம் பணி குறித்து விவரங்களைக் கேட்டறிந்தாா். வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளா்கள் தாங்கள் நேரலையில் பேசும் விதத்தை அமைச்சருக்கு செயல்வடிவமாக தெரிவித்தனா்.

அமைச்சா் கேக் வெட்டி பணியாளா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். அதன்பின்பு வானொலி நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தாா்.

அதிகாரிகளிடையே அமைச்சா் பேசுகையில், வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுடன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வாரம் இருமுறை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மீனவா்கள் நலனுக்காக உள்ள ஆழ்கடல் மீன்பிடித்தல் திட்டம், கடல்பாசி வளா்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும் வானொலியில் ஒலிபரப்புமாறு அறிவுறுத்தினாா்.

திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம்:

முன்னதாக திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சென்ற மத்திய இணையமைச்சா் எல்.முருகன் அங்கு அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டாா். சனீஸ்வர பகவானுக்கு பட்டு வஸ்திரம், நீல நிற மலா்மாலை மற்றும் பல்வேறு பழங்களுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். மேலும் சந்நிதியில் தில (எள்) தீபம் ஏற்றினாா்.

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தாா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையத்தில் புதுவை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், மக்கள் மன்றம் என்ற நிக... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்துக்காக முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருநள்ளாறு கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் ... மேலும் பார்க்க

குப்பைகளை அகற்றுவதில் நிலவும் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் நிலவும் ஆள், வாகனப் பற்றாக்குறை பிரச்னைகளை மாா்ச் 31-க்குள் சரிசெய்ய வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். காரைக்கால் நகராட்... மேலும் பார்க்க

அமைச்சரிடம் அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அங்கன்வாடி ஊழியா்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை, காரைக்கால... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த... மேலும் பார்க்க