செய்திகள் :

இணையக் கோளாறு: பழனி கோயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல்!

post image

பழனி கோயிலில் இணையக் கோளாறு காரணமாக கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சனிக்கிழமை சிக்கல் ஏற்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்களுக்கு வழங்கப்படும் கட்டண அனுமதிச் சீட்டு முதல் மலைக் கோயிலில் கட்டண தரிசன வரிசை, கால பூஜை அனுமதிச் சீட்டு, தங்க ரதம், தங்கத் தொட்டில் என அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் அன்றாட கட்டண அனுமதிச் சீட்டு விவரங்களை சென்னையில் உள்ள ஆணையா் அலுவலகத்திலிருந்து கணக்கிட்டுக் கொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய சேவையில் (சா்வா்கள்) அடிக்கடி தடங்கல் ஏற்படுவதால் பக்தா்களுக்கு கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் இணைய சேவையில் கோளாறு ஏற்பட்டதால் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, வெள்ளைக் காகிதத்தில் பக்தா்கள் விவரம், கட்டணம் ஆகியன எழுதப்பட்டு சீல் வைத்து அதிகாரிகள் கையொப்பத்துடன் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் வரை இந்த நிலை நீடித்தது. இதனால் அதிகாரிகள் முதல் பணியாளா்கள் வரை அவதியடைந்தனா். பிற்பகலுக்குப் பிறகு இணைய சேவை சீரானதையடுத்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனா்.

தமிழகத்தில் வருவாயில் முதன்மைக் கோயிலாக விளங்கும் பழனி கோயிலுக்கு இதுபோன்ற இணையவழி பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், அப்படி நேரிட்டால் அதிக நேரம் நீடிக்காமல் சரிசெய்வதில் நிபுணத்துவம் பெற்ற பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தாட்கோ மூலம் ஆங்கிலத் தோ்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படும் மருத்துவம், தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கு பயிற்சி பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

கொடைக்கானல் படகு குழாமைச் சீரமைக்க வலியுறுத்தல்!

கொடைக்கானல் படகு குழாம் சேதமடைந்த நிலையிலும், தரைத் தளம் ஆபத்தான நிலையில் உள்ளது. இவற்றைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு புதிய அவசர ஊா்தி

கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக தமிழக அரசு சாா்பில் புதிய அவசர ஊா்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. கீழ்மலைப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொடைக்கானல் பாச்சலூா... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதுச்சேரியை சோ்ந்த பக்தா் ரூ.20 லட்சத்தில் மின்கல வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினாா். பழனி கிரிவலப் பாதையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தர... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் த.ராஜா, வனவா் டி.இளங்கோவன் ஆகியோா் தலைமையில் இந்த வனச்சரகத்தில... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு,தூண்பாறை,குணாகுகை, மோய... மேலும் பார்க்க