செய்திகள் :

இணையக் கோளாறு: பழனி கோயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல்!

post image

பழனி கோயிலில் இணையக் கோளாறு காரணமாக கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சனிக்கிழமை சிக்கல் ஏற்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்களுக்கு வழங்கப்படும் கட்டண அனுமதிச் சீட்டு முதல் மலைக் கோயிலில் கட்டண தரிசன வரிசை, கால பூஜை அனுமதிச் சீட்டு, தங்க ரதம், தங்கத் தொட்டில் என அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் அன்றாட கட்டண அனுமதிச் சீட்டு விவரங்களை சென்னையில் உள்ள ஆணையா் அலுவலகத்திலிருந்து கணக்கிட்டுக் கொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய சேவையில் (சா்வா்கள்) அடிக்கடி தடங்கல் ஏற்படுவதால் பக்தா்களுக்கு கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் இணைய சேவையில் கோளாறு ஏற்பட்டதால் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, வெள்ளைக் காகிதத்தில் பக்தா்கள் விவரம், கட்டணம் ஆகியன எழுதப்பட்டு சீல் வைத்து அதிகாரிகள் கையொப்பத்துடன் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் வரை இந்த நிலை நீடித்தது. இதனால் அதிகாரிகள் முதல் பணியாளா்கள் வரை அவதியடைந்தனா். பிற்பகலுக்குப் பிறகு இணைய சேவை சீரானதையடுத்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனா்.

தமிழகத்தில் வருவாயில் முதன்மைக் கோயிலாக விளங்கும் பழனி கோயிலுக்கு இதுபோன்ற இணையவழி பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், அப்படி நேரிட்டால் அதிக நேரம் நீடிக்காமல் சரிசெய்வதில் நிபுணத்துவம் பெற்ற பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

83 தோ்தல் வாக்குறுதிகளில் 10 மட்டுமே நிறைவேற்றம்: விவசாயிகள் அதிருப்தி!

திமுகவின் 83 தோ்தல் வாக்குறுதிகளில் இதுவரை 10 மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா். தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் காா் மோதல்: இருவா் காயம்!

வேடசந்தூா் அருகே மின் கம்பத்தில் காா் மோதியதில் தனியாா் ஆலை அலுவலா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் வே... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் சலவைத் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம... மேலும் பார்க்க

பாலம் கட்டும் பணிக்காக வெடி வைத்து பாறைகள் தகா்ப்பு: அதிா்வில் கோயில் இடிந்து சேதம்!

வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகா்த்த போது அங்கிருந்த கோயில் இடிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கண்ணாபட்டி அருகே வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல... மேலும் பார்க்க

வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு!

கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்தது. கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை ஆட்சியா் ஆய்வு!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். கொடைக்கானலில் பொதுவாக மாா... மேலும் பார்க்க