'கொரோனா முதல் ராணி எலிசபெத் மரணம் வரை...' - புதிய நாஸ்ட்ரடாமஸ்ஸின் லேட்டஸ்ட் கணிப்பு
இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது நாடி ஜோதிடம். இந்த நாடி ஜோதிடத்தின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் பல எதிர்கால விஷயங்களை கணித்துக் கூறி வருகிறார். இவர் கூறுவது நடக்கிறது எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 4-ம் தேதி, அவர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில், ஆயில் டேங்கர் ஒன்று ஒரு விபத்தில் சிக்கும் என்று கூறியிருந்தார். அடுத்த ஏழு நாட்களிலேயே அதாவது மார்ச் 11-ம் தேதி, வடக்கு கடலில் எம்வி சோலாங் சரக்குக் கப்பல், 18,000 டன் ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற அமெரிக்கக் கொடியிட்ட எம்வி ஸ்டெனா இம்மாகுலேட் என்ற எண்ணெய் டேங்கருடன் மோதியது.

இது பார்க்கரின் முதல் கணிப்பு அல்ல. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறப்பு, கொரோனா பேரிடர், தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்ப்பின் மீது கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு என பல சம்பவங்களை இதற்கு முன்பு கணித்துக் கூறியுள்ளார். அவை அனைத்தும் அவர் கூறிய சில நாட்களிலேயே நடந்தும் உள்ளது.
தனது இருபதுகளில் இந்தியா வந்த பார்க்கர் இங்கிருக்கும் ஜோதிடத்தின் மீது நாட்டம் கொண்டு நாடி ஜோதிடத்தை கற்றுக்கொண்டுள்ளார். தற்போது இவர் தனது மனைவியுடன் சேர்ந்து இந்தக் கணிப்புகளை கணித்து வருகிறார். சிலர் இவரை 'புதிய நாஸ்ட்ரடாமஸ்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். மூடபழக்க வழக்கங்களை எதிர்க்கும் மக்கள் இவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்