செய்திகள் :

பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!

post image

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார்.

அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரின் புகைப்படங்களைப் பகிர்ந்து இவர்களுக்குக் கிடைத்ததைப் போன்று பாஜகவைச் (பாஜக எம்எல்ஏ மானவ் தேகா உள்பட 3 பேரி) சேர்ந்த பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும். சட்டம் அனைவருக்கும் சமமானதா? என்று கேள்வி எழுப்பிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரீத்தம் சிக் மீது லட்சுமிபூர் காவல்துறையில் மானவ் தேகாவின் மனைவி ராஜஸ்ரீ தேகா புகாரளித்தார். அவர்மீது மானநஷ்ட வழக்கு மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் அஸ்ஸாம் காவல்துறையால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதியப்பட்டதற்கானன் காரணம் பற்றிக் கேட்டபோது, பட்டியலினத்தைச் சேர்ந்த தனது மனைவி அந்தப் பதிவால் பாதிக்கப்பட்டதாக மானவ் தேகா குறிப்பிட்டார்.

கௌஹாத்தி உயர் நீதிமன்ற வழக்குரைஞரான ரீத்தம் சிங் பாஜகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையை அஸ்ஸாம் அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதையும் படிக்க | தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

"முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மாவின் கீழ் காவல்துறை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அமித் ஷாவுக்கு தெரியுமா? அசாம் காவல்துறையை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். இது தவறான குற்றச்சாட்டு” என காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ராஜஸ்ரீ தேகா, “நான் ஒரு பெண், மனைவி, சகோதரி, தாய் மற்றும் பட்டியலினைதை சேர்ந்தவள். நான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். பொறுப்பான பதவிகளில் இருக்கும் என் கணவரை ‘பாலியல் வன்கொடுமை குற்றவாளி’ என்று கூறுவது எவ்வளவு கொடுமையானது” என்று அவர் குறிப்பிட்டார்.

விண்வெளி விஞ்ஞானியாவது எப்படி? யாரெல்லாம் ஆக முடியும்?

விண்வெளி விஞ்ஞானி என்ற பணி பெயரையும் புகழையும் நல்ல சம்பளத்தையும் கொடுத்தாலும் எல்லோராலும் விண்வெளி விஞ்ஞானி ஆகிவிட முடியாது. அந்தப் பணியில் ஏகப்பட்ட ஆபத்துகள் இருந்தாலும், அதி தீவிர உடல் பாதிப்புகள்,... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பிரதான் திங்கள்கிழமை காலமானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் ... மேலும் பார்க்க

பாபர் மசூதியின் நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும்: ஹிந்து அமைப்புகள் மிரட்டல்!

முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது போராட்டம் நடத்தவிருப்பதாக ஹிந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் மராத்திய அரசரான சம்பாஜி மகாராஜாவை கொடும... மேலும் பார்க்க

அமிர்தசரஸ் கோயிலில் கையெறி குண்டு வீச்சு: சந்தேக நபர் சுட்டுக்கொலை

போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு இ... மேலும் பார்க்க

கொல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி பதவியேற்பு!

கொல்கத்தாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி இன்று பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி ஜாய்மல்யாவுக்கு இந்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவின் எல்லை மாவட்டமான ஹண்ட்வாராவில் உள்ள ஜசல்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் ... மேலும் பார்க்க