செய்திகள் :

பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!

post image

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார்.

அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரின் புகைப்படங்களைப் பகிர்ந்து இவர்களுக்குக் கிடைத்ததைப் போன்று பாஜகவைச் (பாஜக எம்எல்ஏ மானவ் தேகா உள்பட 3 பேரி) சேர்ந்த பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும். சட்டம் அனைவருக்கும் சமமானதா? என்று கேள்வி எழுப்பிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரீத்தம் சிக் மீது லட்சுமிபூர் காவல்துறையில் மானவ் தேகாவின் மனைவி ராஜஸ்ரீ தேகா புகாரளித்தார். அவர்மீது மானநஷ்ட வழக்கு மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் அஸ்ஸாம் காவல்துறையால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதியப்பட்டதற்கானன் காரணம் பற்றிக் கேட்டபோது, பட்டியலினத்தைச் சேர்ந்த தனது மனைவி அந்தப் பதிவால் பாதிக்கப்பட்டதாக மானவ் தேகா குறிப்பிட்டார்.

கௌஹாத்தி உயர் நீதிமன்ற வழக்குரைஞரான ரீத்தம் சிங் பாஜகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையை அஸ்ஸாம் அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதையும் படிக்க | தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

"முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மாவின் கீழ் காவல்துறை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அமித் ஷாவுக்கு தெரியுமா? அசாம் காவல்துறையை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். இது தவறான குற்றச்சாட்டு” என காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ராஜஸ்ரீ தேகா, “நான் ஒரு பெண், மனைவி, சகோதரி, தாய் மற்றும் பட்டியலினைதை சேர்ந்தவள். நான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். பொறுப்பான பதவிகளில் இருக்கும் என் கணவரை ‘பாலியல் வன்கொடுமை குற்றவாளி’ என்று கூறுவது எவ்வளவு கொடுமையானது” என்று அவர் குறிப்பிட்டார்.

கொல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி பதவியேற்பு!

கொல்கத்தாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி இன்று பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி ஜாய்மல்யாவுக்கு இந்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவின் எல்லை மாவட்டமான ஹண்ட்வாராவில் உள்ள ஜசல்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் ... மேலும் பார்க்க

கொல்கத்தா வழக்கு: மாணவியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில், புதிய சிபிஐ விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந... மேலும் பார்க்க

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ... மேலும் பார்க்க

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா். இந்த மாணவயின் சகோதரா்களை... மேலும் பார்க்க