செய்திகள் :

கும்பமேளா: 45 நாள்களில் ரூ.30 கோடி; யோகி பாராட்டிய படகு உரிமையாளர் -`ரூ.12 கோடி' கட்ட ஐ.டி நோட்டீஸ்!

post image

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா 45 நாள்கள் விமரிசையாக நடந்து சிவராத்திரியோடு முடிவுக்கு வந்துள்ளது. இக்கும்பமேளா குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில் அளித்த பதிலில், ''கும்பமேளாவில் பிந்து மெஹ்ராவும், அவரது குடும்பத்தினரும் படகு ஓட்டி 45 நாள்களில் ரூ.30 கோடி சம்பாதித்து இருக்கின்றன. படகோட்டியின் குடும்பத்தில் மட்டும் 150 படகுகள் இருக்கிறது. ஒவ்வொரு படகும் 45 நாட்களில் தலா ரூ.23 லட்சம் சம்பாதித்து இருக்கிறது. அதாவது தினமும் 50 முதல் 52 ஆயிரம் வரை சம்பாதித்து இருக்கிறது. கும்பமேளாவிற்கு முன்பு ஒவ்வொரு படகும் 1000 ரூபாயில் இருந்து 2000 வரை மட்டுமே சம்பாதித்து வந்தன'' என்று குறிப்பிட்டு இருந்தார். இச்செய்தி சோசியல் மீடியாவில் வைரலானது. உடனே அதனை பார்த்த வருமான வரித்துறை சுதாரித்துக்கொண்டு மெஹ்ராவிற்கு ரூ.12.8 கோடி வருமான வரி செலுத்தும்படி கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ள மெஹ்ரா என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படகும் தினமும் 50 ஆயிரம் சம்பாதித்து இருந்தாலும் படகு ஓட்டுபவர்கள் சம்பளம் மற்றும் அரசுக்கான கட்டணம் செலுத்தவேண்டும். அதனை கணக்கில் எடுக்காமல் நேரடியாக முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தனக்கு ரூ.30 கோடி வருமானம் கிடைத்தது என்று கூறி மெஹ்ரா சிக்கலில் மாட்டிக்கொண்டார். இந்த அளவுக்கு 45 நாள்களில் பணம் சம்பாதிப்போம் என்று அவர் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். வருமான வரித்துறை சட்டம் 4 மற்றும் 68-வது சட்டப்பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரி ஆலோசகர் மந்தன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''படகோட்டியின் குடும்பம் வழக்கமான நாள்களில் மாதம் 15000 சம்பாதிப்பதே கடினம். கும்பமேளாவில் அதிகப்படியான கூட்டம் வந்ததால் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு ரூ.30 கோடியை சம்பாதித்து இருக்கிறார். இந்தியாவில் உள்ள வரி முறைகள் குறித்து மெஹ்ராவிற்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் இப்போது 12.8 கோடி வருமான வரி கட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மெஹ்ரா 150 படகுகள் வாங்க தனது தாயாரின் தங்க ஆபரணங்களை அடகு வைத்ததாகத் தெரிவித்துள்ளார். ``எனது தாயாருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நகைகளை கொடுங்கள் என்று என் தாயாரிடம் கேட்டேன். அவர் கொடுத்த தங்கத்தை அடகு வைத்து படகுகளை வாங்கினேன்" என்று மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

குறுக்கே வந்தப் பூனை; அடித்து, உயிரோடு கொளுத்திய மூடநம்பிக்கையாளர்கள்... உபி-யில் அதிர்ச்சி சம்பவம்!

குறுக்கே பூனை வந்ததால், அந்தப் பூனையை உயிரோடு எரித்து கொலைசெய்த சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியில் ஒரு பெண்ணும் அவரது நண்பரும் பைக்கி... மேலும் பார்க்க

மண்ணுக்குள் புதைந்திருந்த 90 வருட ரேர் விஸ்கி பாட்டில்கள்... வாக்கிங் சென்றபோது கண்டெடுத்த இளைஞர்!

அமெரிக்காவின் ஜெர்சி நகரத்தின் மார்கேட் பியர் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், சுமார் 90 ஆண்டுகள் பழைமையான விஸ்கி பாட்டில்களைக் கண்டெடுத்துள்ளார்.ஆஸ்டின் கொன்டெஜியாகோமோ என்ற அந்த ந... மேலும் பார்க்க

ஈபிள் கோபுரம் மீது ஹிஜாப்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல பிராண்டின் விளம்பரம் - என்ன நடந்தது?

டச்சு நாட்டைச் சேர்ந்த ஃபேஷன் பிராண்டான மெர்ராச்சி, சர்ச்சைக்குரிய விளம்பர வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டது. அந்த விளம்பர வீடியோவில், பிரான்ஸ் நாட்டிலுள்ள புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம... மேலும் பார்க்க

பாம்பன் மீனவருக்கு ஜாக்பாட் : இரண்டு `கூறல்’ மீன்கள், ரூ.2.60 லச்சத்துக்கு ஏலம் - என்ன காரணம்?

பாம்பன் தென்கடல் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடித்துவிட்டு நேற்று கரை திரும்பினர். தெற்குவாடி மீன் இறங்கு ... மேலும் பார்க்க