செய்திகள் :

மணிகரண்: 24 மணிநேரமும் கொதிக்கும் இயற்கை வெந்நீர் ஊற்று; சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது ஏன்?

post image

பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புனிததலம் தான் மணிகரண். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. வெந்நீர் ஊற்றில் இயற்கையாகவே தண்ணீர் சூடாக கொதித்துக் கொண்டே இருக்குமாம்.

இதனைப் பார்க்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த நகரத்திற்கு வருகை தருகின்றனர். இந்த இடம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மணிகரண் என்பது இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கான ஒரு புனித யாத்திரை மையமாகும்.

இது இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மேலும் மணாலியில் இருந்து வெறும் 80 கி.மீ தொலைவில் இது உள்ளது. மணாலி மற்றும் குலுவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மணிகரண் மற்றும் அதன் வெந்நீர் ஊற்றுகள் ஈர்க்கிறது.

இந்த இயற்கை வெந்நீர் ஊற்றுகளுக்கு சில புராணங்கள் கூறப்படுகிறது.

இந்துக்களின் நம்பிக்கை

இந்துக்களின் நம்பிக்கைக்கு ஒரு புராணம் கூறப்படுகிறது. சிவன் மற்றும் பார்வதி தேவி வானில் வலம் வரும்போது, மலைகளால் சூழப்பட்ட பசுமையான ஒரு இடத்திற்கு வருகின்றனர். அந்த இடத்தின் அழகாக ஈர்க்கப்பட்ட அவர்கள் சிறிது காலம் அங்கே செலவிட முடிவு செய்தன. அவர்கள் அந்த இடத்தில் பல ஆண்டுகள் கழித்ததாக நம்பப்படுகிறது.

அங்கே தங்கி இருந்தபோது பார்வதி தேவி தனது மணிமாலையை நீரோடையில் தவற விட்டிருக்கிறார். இதனை மீட்டு தருமாறு சிவபெருமானிடம் பார்வதி தேவி கூறியுள்ளார்.

மணிமாலையை மீட்டெடுக்க உதவியாளரிடம் கட்டளையிட்டார் சிவபெருமான். ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் பிரபஞ்சத்தில் பின்விளைவுகள் ஏற்பட்டன.

சிவனை சமாதானப்படுத்த பாம்பு கடவுளான சேஷ்னாக்கிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சத்தமிட்டு அங்கு இருக்கும் தண்ணீர் ஊற்று சூடாகி கொதிக்க ஆரம்பித்தது, அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மணிமாலை மீட்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

சீக்கியர்களின் நம்பிக்கை

சீக்கியர்களின் கூற்றுப்படி, குருநானக் தேவ்ஜி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் மணிகரணுக்கு விஜயம் செய்ததாகவும், அவரது வருகையின் போது, ​​பசித்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு சமைக்க விரும்பினார் என்றும், ஆனால் அங்கு எந்த நெருப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தபோது, அந்த நீரூற்று ஒரு வெந்நீர் ஊற்றாக மாறியதாக இவர்கள் நம்புகின்றனர்.

மணாலி மற்றும் குலு ஆகிய குளிர் பிரதேச இடங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மணிகரணில் இருக்கும் வெந்நீர் ஊற்று, அதன் வெப்பம் காரணமாக ஈர்க்கிறது. இயற்கையாகவே கொதித்துக் கொண்டிருக்கும் இந்த வெந்நீர் ஊற்றில் சமையல் செய்து அதனை யாத்திரிகளுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

ஒரு சோதனை புவி வெப்ப சக்தி ஆலையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகலிங்க வடிவில் அற்புத பாறை! மாதேஸ்வர மலைப் பயணம் குறித்து தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Passport: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்... இனி பாஸ்போர்ட் பெற இந்த சான்றிதழ் கட்டாயம்!

டிரிப், படிப்பு, வேலை... - எதற்கு வெளிநாடு செல்ல வேண்டுமானாலும், பாஸ்போர்ட் மிக அவசியம். சுற்றுலா முதல் அலுவல் நிமித்தமாக பல லட்ச மக்கள் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.... மேலும் பார்க்க

Tour: கோடையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறீர்களா - இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களாக இருந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் தனியார் வாகனங்களில் சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுற... மேலும் பார்க்க

₹ 1 -க்கு இவ்வளவு மதிப்பா? இந்திய ரூபாய் வைத்திருந்தால் இந்த நாடுகளில் நீங்கள் பணக்காரர் தான்!

சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிடும் போது பணம் குறித்த கவலைகள் தான் நம் நினைவிற்கு உடனே வரும். நம் ஊரில் அதன் மதிப்பு வேறு, வெளிநாடுகளில் அதன் மதிப்பு வ... மேலும் பார்க்க

டெல்டா பகுதிகளில் மழை... சட்டென மாறிய சூழல்.. | Photo Album

டெல்டா பகுதிகளில் மழைடெல்டா பகுதிகளில் மழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழைமழை மேலும் பார்க்க

ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பிரிட்டிஷ் ஆட்சியின் போது நீலகிரியில் தொடங்கப்பட்ட மலை ரயில் சேவை நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்து, ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கர தண்டவாள அமைப்பும... மேலும் பார்க்க