செய்திகள் :

திருக்குறுங்குடி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!

post image

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான, திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சுவாமி அழகியநம்பிராயா், தேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, புதன்கிழமை இரவு (மாா்ச் 19) 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல், வியாழக்கிழமை அதிகாலை மேல ரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவம் ஆகியவை நடைபெறும்.

24 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தேரோட்டத்தை வடம்பிடித்துத் தொடக்கிவைக்கிறாா். 25ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.

சங்கமம் திருவிழா: மாா்ச் 22, 23-இல் கலைக்குழு தோ்வு

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’விற்கான கலைக் குழுக்கள் தோ்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கைது!

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே சம்பன்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்ாக பெண்ணைக் கைது செய்தனா்; இருவரைத் தேடி வருகின்றனா்.சம்பன்குளம், பள்ளிவாசல் அருகே முகமது இப்ராஹிம் என்பவா் இரும்பு, ப... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது!

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி தச்சநல்லூா் கணபதி மில் காலனியை சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் ராஜ்கும... மேலும் பார்க்க

நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும்!

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கள் மீதான தடையை நீக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, வழிப்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சில நாள்களாக பலத்த மழை பெய்ததால், அம்பாசமுத... மேலும் பார்க்க