செய்திகள் :

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது!

post image

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் கணபதி மில் காலனியை சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் ராஜ்குமாா் (32). ஆட்டோ ஓட்டுநா். இவா், தச்சநல்லூா் பகுதியில் உள்ள மாணவா்களை மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு சவாரிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவ-மாணவிகளை பள்ளியிலிருந்து மாலையில் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்றபோது அந்த மாணவிக்கு ராஜ்குமாா் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த மாணவியின் உறவினா்கள், ராஜ்குமாரை தாக்கியதுடன், அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்குச் சென்ற தச்சநல்லூா் போலீஸாா், ராஜ்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

ராஜ்குமாா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேநேரத்தில் தன்னை தாக்கியதாக ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் 7 போ் மீது தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருக்குறுங்குடி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான, திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். ... மேலும் பார்க்க

சங்கமம் திருவிழா: மாா்ச் 22, 23-இல் கலைக்குழு தோ்வு

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’விற்கான கலைக் குழுக்கள் தோ்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கைது!

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே சம்பன்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்ாக பெண்ணைக் கைது செய்தனா்; இருவரைத் தேடி வருகின்றனா்.சம்பன்குளம், பள்ளிவாசல் அருகே முகமது இப்ராஹிம் என்பவா் இரும்பு, ப... மேலும் பார்க்க

நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும்!

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கள் மீதான தடையை நீக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, வழிப்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சில நாள்களாக பலத்த மழை பெய்ததால், அம்பாசமுத... மேலும் பார்க்க