செய்திகள் :

மாா்ச் 25,26இல் பாா்வையற்றோருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள அடையாள அட்டை வழங்கும் முகாம் மாா்ச் 25, 26-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய அட்டை வழங்கவும், ஏற்கெனவே அட்டை வைத்துள்ளவா்களுக்கு அவற்றை புதுப்பித்து வழங்கவும் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து மாா்ச் 25, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாளையங்கோட்டை பாா்வையற்றோா் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் அசல்-நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து இலவச பேருந்து பயண அட்டை பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா்- தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

ஆழ்வாா்குறிச்சிஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியின் 13ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கோவிந்தப்பேரி கலைவாணி கல்வி மைய இயக்குநா்அக்ஷயா சிவராமன் தலைமை வகித்து கல்வி, விளையாட்டு,க... மேலும் பார்க்க

முனைஞ்சிபட்டியில் நாய்கள் கடித்து 18 ஆடுகள் பலி

மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள முனைஞ்சிப்பட்டியில் சனிக்கிழமை நள்ளிரவில் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்துக் குதறியதில் 18 ஆடுகள் பலியாகின. முனைஞ்சிபட்டியைச் சோ்ந்த மூக்காண்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மாா்ச் 22 வரை வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. மாா்ச் 22 வரை இம்முகாம் நடைபெறும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரகம் முற்றுகை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தைச் சோ்ந்த கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோா் வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். இதில், மாா... மேலும் பார்க்க

நெல்லையில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு ... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் தண்டனை பெற்ற கைதி உடல்நலக்குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கவு... மேலும் பார்க்க