செய்திகள் :

காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்: நாகை எம்.பி. வலியுறுத்தல்

post image

புது தில்லி: காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற

2025-2026-ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சக கட்டுப்பாட்டின்கீழ் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்று அவா் பேசியது:

நாகப்பட்டினம் தொகுதி என்பது காவிரி பாசனப் பகுதியில் கடைமடைப் பகுதி. ரயில் போக்குவரத்தில் கடைமடைப் பகுதி.

ஏழை,எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயத் தொழிலாளா்கள், மீனவா்கள் என அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் தொகுதியாகும்.

இத்தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளன. கிழக்கு டெல்டா மாவட்டம் என்று சொல்லக்கூடிய நாகப்பட்டினம் தொகுதியில் நாகப்பட்டினம், காரைக்கால், நாகூா், வேளாங்கண்ணி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, நீடாமங்கலம், கீழ்வேலூா், வேதாரண்யம், நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய ரயில் சேவை இல்லை.

இப்பகுதி மக்களுக்கு விரும்பக்கூடிய ரயில் பயணம் அனுபவம் இல்லாத நிலைமை உள்ளது. ஆகவே, காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும். திருவாரூா்-காரைக்குடி தடத்தை மின்வழி இரட்டை பாதையாக மாற்ற வேண்டும். திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான பணிமனை என்று சொல்லக்கூடிய பிட்லைன் அமைத்திட வேண்டும்.

பிராந்திய மொழி தெரிந்தவா்களை அந்தந்த ரயில்வே பகுதியில் பணியில் அமா்த்த வேண்டும். 200 கிலோமீட்டா் வரை சீசன் டிக்கெட் வழங்கிட வேண்டும். முதியோா் ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் தொடங்கிட வேண்டும். திருவாரூா் அலுவலகத்தில் மூடப்பட்டுள்ள பாா்சல் அலுவலகத்தை மீண்டும் இயங்க செய்திட வேண்டும்.

பாம்பன் பாலம் திறப்புக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக அதிக ரயில்களை இயக்க வேண்டும். புனலூா் ரயிலை காரைக்கால் வரை நீட்டித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா் வலியுறுத்தினாா்.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க