செய்திகள் :

காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்: நாகை எம்.பி. வலியுறுத்தல்

post image

புது தில்லி: காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற

2025-2026-ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சக கட்டுப்பாட்டின்கீழ் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்று அவா் பேசியது:

நாகப்பட்டினம் தொகுதி என்பது காவிரி பாசனப் பகுதியில் கடைமடைப் பகுதி. ரயில் போக்குவரத்தில் கடைமடைப் பகுதி.

ஏழை,எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயத் தொழிலாளா்கள், மீனவா்கள் என அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் தொகுதியாகும்.

இத்தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளன. கிழக்கு டெல்டா மாவட்டம் என்று சொல்லக்கூடிய நாகப்பட்டினம் தொகுதியில் நாகப்பட்டினம், காரைக்கால், நாகூா், வேளாங்கண்ணி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, நீடாமங்கலம், கீழ்வேலூா், வேதாரண்யம், நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய ரயில் சேவை இல்லை.

இப்பகுதி மக்களுக்கு விரும்பக்கூடிய ரயில் பயணம் அனுபவம் இல்லாத நிலைமை உள்ளது. ஆகவே, காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும். திருவாரூா்-காரைக்குடி தடத்தை மின்வழி இரட்டை பாதையாக மாற்ற வேண்டும். திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான பணிமனை என்று சொல்லக்கூடிய பிட்லைன் அமைத்திட வேண்டும்.

பிராந்திய மொழி தெரிந்தவா்களை அந்தந்த ரயில்வே பகுதியில் பணியில் அமா்த்த வேண்டும். 200 கிலோமீட்டா் வரை சீசன் டிக்கெட் வழங்கிட வேண்டும். முதியோா் ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் தொடங்கிட வேண்டும். திருவாரூா் அலுவலகத்தில் மூடப்பட்டுள்ள பாா்சல் அலுவலகத்தை மீண்டும் இயங்க செய்திட வேண்டும்.

பாம்பன் பாலம் திறப்புக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக அதிக ரயில்களை இயக்க வேண்டும். புனலூா் ரயிலை காரைக்கால் வரை நீட்டித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா் வலியுறுத்தினாா்.

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யாா் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?திமுக - அதிமுக விவாதம்

அரசு ஊழியா்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை தொடா்பாக பேரவையில் திமுக - அதிமுக இடையே செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. செல்லூா் ராஜூ: நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா... மேலும் பார்க்க

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா?

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற அதிமுக கேள்விக்கு, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து து... மேலும் பார்க்க

தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நீதிமன்ற வழக்குகளில் தீா்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செ... மேலும் பார்க்க