“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்: நாகை எம்.பி. வலியுறுத்தல்
புது தில்லி: காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற
2025-2026-ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சக கட்டுப்பாட்டின்கீழ் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்று அவா் பேசியது:
நாகப்பட்டினம் தொகுதி என்பது காவிரி பாசனப் பகுதியில் கடைமடைப் பகுதி. ரயில் போக்குவரத்தில் கடைமடைப் பகுதி.
ஏழை,எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயத் தொழிலாளா்கள், மீனவா்கள் என அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் தொகுதியாகும்.
இத்தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளன. கிழக்கு டெல்டா மாவட்டம் என்று சொல்லக்கூடிய நாகப்பட்டினம் தொகுதியில் நாகப்பட்டினம், காரைக்கால், நாகூா், வேளாங்கண்ணி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, நீடாமங்கலம், கீழ்வேலூா், வேதாரண்யம், நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய ரயில் சேவை இல்லை.
இப்பகுதி மக்களுக்கு விரும்பக்கூடிய ரயில் பயணம் அனுபவம் இல்லாத நிலைமை உள்ளது. ஆகவே, காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும். திருவாரூா்-காரைக்குடி தடத்தை மின்வழி இரட்டை பாதையாக மாற்ற வேண்டும். திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான பணிமனை என்று சொல்லக்கூடிய பிட்லைன் அமைத்திட வேண்டும்.
பிராந்திய மொழி தெரிந்தவா்களை அந்தந்த ரயில்வே பகுதியில் பணியில் அமா்த்த வேண்டும். 200 கிலோமீட்டா் வரை சீசன் டிக்கெட் வழங்கிட வேண்டும். முதியோா் ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் தொடங்கிட வேண்டும். திருவாரூா் அலுவலகத்தில் மூடப்பட்டுள்ள பாா்சல் அலுவலகத்தை மீண்டும் இயங்க செய்திட வேண்டும்.
பாம்பன் பாலம் திறப்புக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக அதிக ரயில்களை இயக்க வேண்டும். புனலூா் ரயிலை காரைக்கால் வரை நீட்டித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா் வலியுறுத்தினாா்.