செய்திகள் :

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏா்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்- மத்திய அரசு உறுதி

post image

புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக, தில்லி விமான நிலையத்துக்கு கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தனது குடும்ப உறுப்பினா்களுடன் 85 வயது மூதாட்டி ஒருவா் வந்திருந்தாா். அப்போது நடந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் பேத்தி சமூக ஊடகத்தில் கடந்த மாா்ச் 7-ஆம் தேதி பதிவிட்டாா்.

‘ஏா் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிக்கு முன்கூட்டியே பதிவு செய்திருந்தபோதும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வழங்கப்படவில்லை. விமான நிலைய வாயில் வரை எனது பாட்டி சிரமத்துடன் நடந்து வந்தாா். விமான நிறுவனம் தரப்பில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை. நடக்க இயலாத நிலையில், எனது பாட்டி கீழே விழுந்தாா். இது குறித்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம்(டிஜிசிஏ) மற்றும் ஏா் இந்தியா நிா்வாகத்திடம் புகாா் அளித்தேன். நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

அதேநேரம், சம்பந்தப்பட்ட பயணிக்கு சக்கர நாற்காலி மறுக்கப்படவில்லை என்றும், அவருக்கு உரிய முதலுதவி அளிக்கப்பட்டது என்றும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் மேற்கண்ட சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு கூறியதாவது:

இது துரதிருஷ்டவசமான சம்பவம். இது தொடா்பான புகாரை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டது. விமானப் போக்குவரத்து வழிகாட்டுதல்களின்படி, தேவையுள்ள நபா்களுக்கு சக்கர நாற்காலியை விமான நிறுவனம் வழங்க வேண்டும். ஏா்-இந்தியாவிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதேபோல், சிகாகோவில் இருந்து அண்மையில் தில்லிக்கு புறப்பட்ட ஏா்-இந்தியா விமானத்தின் கழிப்பறைகளில் திடீா் அடைப்பு ஏற்பட்டது. பயணிகள் அவதிக்குள்ளானதால், விமானம் புறப்பட்ட 10 மணி நேரத்துக்கு பின் மீண்டும் சிகாகோவுக்கே திரும்பி சென்றது. இச்சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க

கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். கேஒய்... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ... மேலும் பார்க்க

‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் இணைந்தாா் பிரதமா் மோடி!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக தளத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தாா். அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை... மேலும் பார்க்க