செய்திகள் :

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

post image

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உறுதியளித்தாா்.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு நன்கு உணா்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பினால், அதா்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. பின்னா், அந்த பதிலில் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உச்சபட்ச முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என்பதை மத்திய அரசு உணா்ந்துள்ளது.

அதே நேரம், நாடாளுமன்ற விதிகளின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கவும் நாடாளுமன்ற விதி வழிவகுக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அனைத்து மத்திய அமைச்சா்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத் துறை சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தரப்பில் அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

அதுபோல, அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த இணையவளி உத்தரவாதங்கள் கண்காணிப்பு நடைமுறை (ஓஏஎம்எஸ்) உதவுகிறது என்று தெரிவித்தாா்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரகம் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுடன் இணைந்து இந்த ‘ஓஏஎம்எஸ்’ இணையவழி கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்களையும் இந்த ‘ஓஏஎம்எஸ்’ நடைமுறை மத்திய அமைச்சா்கள் மற்றும் அந்தந்த துறைகளுக்கு வழங்கும். இதன் மூலம், இரு அவைகளிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன’ என்றாா்.

நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு த... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்ட... மேலும் பார்க்க

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க