செய்திகள் :

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

post image

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உறுதியளித்தாா்.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு நன்கு உணா்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பினால், அதா்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. பின்னா், அந்த பதிலில் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உச்சபட்ச முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என்பதை மத்திய அரசு உணா்ந்துள்ளது.

அதே நேரம், நாடாளுமன்ற விதிகளின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கவும் நாடாளுமன்ற விதி வழிவகுக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அனைத்து மத்திய அமைச்சா்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத் துறை சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தரப்பில் அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

அதுபோல, அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த இணையவளி உத்தரவாதங்கள் கண்காணிப்பு நடைமுறை (ஓஏஎம்எஸ்) உதவுகிறது என்று தெரிவித்தாா்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரகம் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுடன் இணைந்து இந்த ‘ஓஏஎம்எஸ்’ இணையவழி கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்களையும் இந்த ‘ஓஏஎம்எஸ்’ நடைமுறை மத்திய அமைச்சா்கள் மற்றும் அந்தந்த துறைகளுக்கு வழங்கும். இதன் மூலம், இரு அவைகளிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன’ என்றாா்.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி: மக்களவையில் பிரதமர் மோடி உரை

புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளு... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராப்ரி தேவி!

ரயில்வே வேலைக்காக நிலத்தைலஞ்சமாகப்பெற்ற ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்துபிகார்முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி... மேலும் பார்க்க