செய்திகள் :

ஆரணி பட்டு தயாரிப்பு மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது: திமுக எம்பி வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

புது தில்லி: ஆரணியில் தயாராகும் பட்டின் மூலப் பொருள்களுக்கும், அரிசிக்கும் ஜிஎஸ்டிவரியை விதிக்கக் கூடாது என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தரணிவேந்தன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: ‘பட்டு நகரம்’ என அழைக்கப்படும் ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிகத் தொழில் நகரமாகும். ஆரணி பட்டு நெசவு நூற்பாலை மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு தாயகமாகும். இந்த நகரம் அரிசி உற்பத்தி மற்றும் பட்டு நெசவு மூலம் முக்கிய வருவாய் ஈட்டி வருகிறது. பட்டு நெசவுக்காக பட்டு நெசவு ஆலைகளும், சமூகங்களும் இந்த நகரத்தில் உள்ளனா்.

கைத்தறிவு நெசவு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சமீப காலமாக விசைத்தறிகள் போன்ற இயந்திரமுறைக்கு மாறியுள்ளன. திருவண்ணாமலை நகரத்தில் அதிக வருவாய் ஈட்டி வரும் இந்த நகரத்தில் தற்போது நெசவு த் தொழில் மெதுவாக மறைந்து வருகிறது. இங்கு பாரம்பரியமிக்க பட்டுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டாலும் மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அதேபோன்று, சில்லறையில் விற்கப்படும் அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால், பட்டுப்பொருள் மூலப் பொருள்களுக்கும், சில்லறையில் விற்கப்படும்

25 கிலோ ஆரணி அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவ... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதிய... மேலும் பார்க்க

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப... மேலும் பார்க்க