செய்திகள் :

ஆரணி பட்டு தயாரிப்பு மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது: திமுக எம்பி வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

புது தில்லி: ஆரணியில் தயாராகும் பட்டின் மூலப் பொருள்களுக்கும், அரிசிக்கும் ஜிஎஸ்டிவரியை விதிக்கக் கூடாது என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தரணிவேந்தன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: ‘பட்டு நகரம்’ என அழைக்கப்படும் ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிகத் தொழில் நகரமாகும். ஆரணி பட்டு நெசவு நூற்பாலை மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு தாயகமாகும். இந்த நகரம் அரிசி உற்பத்தி மற்றும் பட்டு நெசவு மூலம் முக்கிய வருவாய் ஈட்டி வருகிறது. பட்டு நெசவுக்காக பட்டு நெசவு ஆலைகளும், சமூகங்களும் இந்த நகரத்தில் உள்ளனா்.

கைத்தறிவு நெசவு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சமீப காலமாக விசைத்தறிகள் போன்ற இயந்திரமுறைக்கு மாறியுள்ளன. திருவண்ணாமலை நகரத்தில் அதிக வருவாய் ஈட்டி வரும் இந்த நகரத்தில் தற்போது நெசவு த் தொழில் மெதுவாக மறைந்து வருகிறது. இங்கு பாரம்பரியமிக்க பட்டுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டாலும் மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அதேபோன்று, சில்லறையில் விற்கப்படும் அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால், பட்டுப்பொருள் மூலப் பொருள்களுக்கும், சில்லறையில் விற்கப்படும்

25 கிலோ ஆரணி அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க