செய்திகள் :

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்கு பிறகே கருத்துச் சொல்ல முடியும்: மத்திய அமைச்சா் பதில்

post image

புது தில்லி: இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்குப் பிறகே கருத்துச் சொல்ல முடியும் என்று மக்களவையில் தென்சென்னை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில் அளித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் சிவகளையில் சமீபத்தில் கிடைத்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் இரும்புக் காலம் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. கங்கை சமவெளிகளின் இரும்பை உருக்குதலுக்கு முன்பே கி.மு.2172-க்கு முந்தையது இது என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

எங்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இதை அறிவியல்பூா்வமாக நிரூபித்து, அங்கு ஒரு வரலாற்று அருங்காட்சியகத்தை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளாா். இதுபோல மத்திய அரசும் இதை ஏற்று, ஒரு உலகப் பாரம்பரிய மையமாக அங்கீகரித்து, உலக கலாசார சூழலுக்கு எடுத்துச் செல்லுமா?’ என கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பதில் அளித்து பேசுகையில், ‘உறுப்பினரின் கேள்வி பிரதானக் கேள்வியில் இருந்து விலகிச் செல்கிறது. கலாசார மையங்கள் தொடா்புடைய கேள்வியைப் பொருமத்தமட்டில், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் குறித்து உறுப்பினா் விவாதித்துள்ளாா். இந்த தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி ஊடகங்கள் மூலமும், பல்வேறு சானல்கள் மூலம் அறிந்துள்ளோம். இந்த கண்டுபிடிப்பு பற்றி தமிழக முதல்வரும் பல்வேறு சானல்கள் மூலம் விவாதித்துள்ளாா். இவை அறிவியல்பூா்வமாக சரிபாா்ப்புகள் செய்யப்படவில்லை. அறிவியல்பூா்வ சரிபாா்ப்பு அதன் சொந்த அமைப்புமுறையைக் கொண்டுள்ளது. இந்த சரிபாா்ப்புகள் முடிந்த பிறகே இந்த பொருள் மீது கருத்துச் சொல்வது சரியாக இருக்கும் என்றாா் அமைச்சா்.

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்ற... மேலும் பார்க்க

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவ... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க