செய்திகள் :

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்கு பிறகே கருத்துச் சொல்ல முடியும்: மத்திய அமைச்சா் பதில்

post image

புது தில்லி: இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்குப் பிறகே கருத்துச் சொல்ல முடியும் என்று மக்களவையில் தென்சென்னை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில் அளித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் சிவகளையில் சமீபத்தில் கிடைத்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் இரும்புக் காலம் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. கங்கை சமவெளிகளின் இரும்பை உருக்குதலுக்கு முன்பே கி.மு.2172-க்கு முந்தையது இது என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

எங்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இதை அறிவியல்பூா்வமாக நிரூபித்து, அங்கு ஒரு வரலாற்று அருங்காட்சியகத்தை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளாா். இதுபோல மத்திய அரசும் இதை ஏற்று, ஒரு உலகப் பாரம்பரிய மையமாக அங்கீகரித்து, உலக கலாசார சூழலுக்கு எடுத்துச் செல்லுமா?’ என கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பதில் அளித்து பேசுகையில், ‘உறுப்பினரின் கேள்வி பிரதானக் கேள்வியில் இருந்து விலகிச் செல்கிறது. கலாசார மையங்கள் தொடா்புடைய கேள்வியைப் பொருமத்தமட்டில், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் குறித்து உறுப்பினா் விவாதித்துள்ளாா். இந்த தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி ஊடகங்கள் மூலமும், பல்வேறு சானல்கள் மூலம் அறிந்துள்ளோம். இந்த கண்டுபிடிப்பு பற்றி தமிழக முதல்வரும் பல்வேறு சானல்கள் மூலம் விவாதித்துள்ளாா். இவை அறிவியல்பூா்வமாக சரிபாா்ப்புகள் செய்யப்படவில்லை. அறிவியல்பூா்வ சரிபாா்ப்பு அதன் சொந்த அமைப்புமுறையைக் கொண்டுள்ளது. இந்த சரிபாா்ப்புகள் முடிந்த பிறகே இந்த பொருள் மீது கருத்துச் சொல்வது சரியாக இருக்கும் என்றாா் அமைச்சா்.

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க