செய்திகள் :

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்கு பிறகே கருத்துச் சொல்ல முடியும்: மத்திய அமைச்சா் பதில்

post image

புது தில்லி: இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்குப் பிறகே கருத்துச் சொல்ல முடியும் என்று மக்களவையில் தென்சென்னை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில் அளித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் சிவகளையில் சமீபத்தில் கிடைத்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் இரும்புக் காலம் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. கங்கை சமவெளிகளின் இரும்பை உருக்குதலுக்கு முன்பே கி.மு.2172-க்கு முந்தையது இது என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

எங்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இதை அறிவியல்பூா்வமாக நிரூபித்து, அங்கு ஒரு வரலாற்று அருங்காட்சியகத்தை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளாா். இதுபோல மத்திய அரசும் இதை ஏற்று, ஒரு உலகப் பாரம்பரிய மையமாக அங்கீகரித்து, உலக கலாசார சூழலுக்கு எடுத்துச் செல்லுமா?’ என கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பதில் அளித்து பேசுகையில், ‘உறுப்பினரின் கேள்வி பிரதானக் கேள்வியில் இருந்து விலகிச் செல்கிறது. கலாசார மையங்கள் தொடா்புடைய கேள்வியைப் பொருமத்தமட்டில், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் குறித்து உறுப்பினா் விவாதித்துள்ளாா். இந்த தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி ஊடகங்கள் மூலமும், பல்வேறு சானல்கள் மூலம் அறிந்துள்ளோம். இந்த கண்டுபிடிப்பு பற்றி தமிழக முதல்வரும் பல்வேறு சானல்கள் மூலம் விவாதித்துள்ளாா். இவை அறிவியல்பூா்வமாக சரிபாா்ப்புகள் செய்யப்படவில்லை. அறிவியல்பூா்வ சரிபாா்ப்பு அதன் சொந்த அமைப்புமுறையைக் கொண்டுள்ளது. இந்த சரிபாா்ப்புகள் முடிந்த பிறகே இந்த பொருள் மீது கருத்துச் சொல்வது சரியாக இருக்கும் என்றாா் அமைச்சா்.

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்குத் தடை!

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வ... மேலும் பார்க்க

சென்னை ஏசி பேருந்துகளில் பயணிக்க ரூ. 2,000 பாஸ் அறிமுகம்!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க