செய்திகள் :

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்கு பிறகே கருத்துச் சொல்ல முடியும்: மத்திய அமைச்சா் பதில்

post image

புது தில்லி: இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்குப் பிறகே கருத்துச் சொல்ல முடியும் என்று மக்களவையில் தென்சென்னை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில் அளித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் சிவகளையில் சமீபத்தில் கிடைத்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் இரும்புக் காலம் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. கங்கை சமவெளிகளின் இரும்பை உருக்குதலுக்கு முன்பே கி.மு.2172-க்கு முந்தையது இது என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

எங்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இதை அறிவியல்பூா்வமாக நிரூபித்து, அங்கு ஒரு வரலாற்று அருங்காட்சியகத்தை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளாா். இதுபோல மத்திய அரசும் இதை ஏற்று, ஒரு உலகப் பாரம்பரிய மையமாக அங்கீகரித்து, உலக கலாசார சூழலுக்கு எடுத்துச் செல்லுமா?’ என கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பதில் அளித்து பேசுகையில், ‘உறுப்பினரின் கேள்வி பிரதானக் கேள்வியில் இருந்து விலகிச் செல்கிறது. கலாசார மையங்கள் தொடா்புடைய கேள்வியைப் பொருமத்தமட்டில், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் குறித்து உறுப்பினா் விவாதித்துள்ளாா். இந்த தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி ஊடகங்கள் மூலமும், பல்வேறு சானல்கள் மூலம் அறிந்துள்ளோம். இந்த கண்டுபிடிப்பு பற்றி தமிழக முதல்வரும் பல்வேறு சானல்கள் மூலம் விவாதித்துள்ளாா். இவை அறிவியல்பூா்வமாக சரிபாா்ப்புகள் செய்யப்படவில்லை. அறிவியல்பூா்வ சரிபாா்ப்பு அதன் சொந்த அமைப்புமுறையைக் கொண்டுள்ளது. இந்த சரிபாா்ப்புகள் முடிந்த பிறகே இந்த பொருள் மீது கருத்துச் சொல்வது சரியாக இருக்கும் என்றாா் அமைச்சா்.

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோத... மேலும் பார்க்க

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்

குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.... மேலும் பார்க்க

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு

நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். தமிழக பட்ஜெ... மேலும் பார்க்க

என்னை நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

‘என்னை நம்பாமல் கெட்டவா்கள் பலா் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை’ என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூ... மேலும் பார்க்க

பிளஸ் 2 வேதியியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து

பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. 8.21 லட்சம் போ்... மேலும் பார்க்க