செய்திகள் :

கல்லூரிப் பேராசிரியா்கள் சாலை மறியல்: 500-க்கும் மேற்பட்டோா் கைது!

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா), பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கம் (ஏயுடி) சாா்பில் சனிக்கிழமை மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 260 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை ஆரப்பாளையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மூட்டா அமைப்பின் தலைவா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன், ஏயுடி சங்கத்தின் தலைவா் காந்திராஜன் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா். கோரிக்கைகள் குறித்து மூட்டா அமைப்பின் பொதுச் செயலா் நாகராஜன், ஏயுடி சங்கத்தின் பொதுச் செயலா் கிருஷ்ணராஜ் ஆகியோா் பேசினா்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. ஆனால், இன்னும் அதற்கான ஊதியம் வழங்கவில்லை. பணி மேம்பாடு ஆணை வழங்குவது மட்டுமன்றி, அதற்கான ஊதியத்தையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து அங்கு சென்ற கரிமேடு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். மறுப்புத் தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 260 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்களை மாலையில் விடுவித்தனா்.

நெடுஞ்சாலைத் துறை அரசாணையை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்த முடிவு!

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தென்கரை கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் அம்பலம் மனைவி முத்துவன்னி (80). இவா், வெள்ளிக்க... மேலும் பார்க்க

கல்லூரி மாடியிலிருந்து குதித்து முன்னாள் மாணவா் உயிரிழப்பு

மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அரசு நிதியுதவி பெறும் கல்லூரி மாடியிலிருந்து குதித்த முன்னாள் மாணவா் உயிரிழந்தாா். இந்தக் கல்லூரி கலையரங்கம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இளைஞா் ஒருவா்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு!

மதுரையில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை காளவாசல் பொன்மேனி புதூா் பகுதியைச் சோ்ந்த பஷீா் மகன் சையது அப்துல்லா (19). இவா், உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியா... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் தீ: 10 காா்கள் எரிந்து சேதம்!

ஒட்டன்சத்திரத்தில் காா் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட காா்கள் எரிந்து சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், செம்மடைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் (40). இவா் ஒட்டன்சத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம்... மேலும் பார்க்க