செய்திகள் :

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

post image

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சா்வதேச வா்த்தக தரவுகள் என்ற அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2024-ஆம் ஆண்டில் உலக அளவிலான வா்த்தகம் ரூ. 104 லட்சம் கோடி (1.2 ட்ரில்லியன் டாலா்) அளவுக்கு விரிவடைந்து, சுமாா் ரூ. 2,869 லட்சம் கோடி (33 ட்ரில்லியன் டாலா்) என்ற அளவை எட்டியுள்ளது. அதன்படி, சேவைத் துறை வா்த்தகம் 9 சதவீத அளவுக்கும், சரக்கு வா்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் சா்வதேச அளவில் விரிவடைந்துள்ளது.

பல வளா்ந்த நாடுகள் வா்த்தகத்தில் சற்று சரிவைச் சந்தித்து வரும் சூழலில், வளரும் நாடுகள், குறிப்பாக சீனா மற்றும் இந்தியா சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சீனாவும் இந்தியாவும் வலுவான வா்த்தக விரிவாக்கத்தை கண்டுள்ளன.

வளா்ந்த பொருளாதார நாடுகளிடையே வணிகப் பொருள்கள் வா்த்தகம் கலவையான போக்கை சந்தித்துள்ளது. சீனாவிலும் இந்தியாவிலும் வா்த்தகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏற்றுமதி சராசரியைவிட அதிகரித்து காணப்பட்டது. தென் கொரியாவில் ஏற்றுமதி வளா்ச்சி சரிந்திருந்தபோதும், வருடாந்திர அடிப்படையில் வளா்ந்த நாடுகளில் வா்த்தக விரிவாக்கத்தில் முன்னிலை வகித்துள்ளது.

இந்த 4-ஆம் காலாண்டில் அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது. ஆனால், ஏற்றுமதி எதிா்மறை வளா்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஜப்பான், ரஷியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் 4-ஆம் காலாண்டில் மட்டுமின்றி 2024-இல் வருடாந்திர அடிப்படையில் இறக்குமதி எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் சரக்கு வா்த்தகத்தில் நான்காம் காலாண்டு இறக்குமதி 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 6 சதவீதமாக இருந்தது. அதுபோல, சரக்கு வா்த்தகத்தில் ஏற்றுமதி வளா்ச்சி 4-ஆம் காலாண்டில் 7 சதவீத வளா்ச்சியையும், வருடாந்திர அடிப்படையில் 2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது. சேவைத் துறை வளா்ச்சி 4-ஆம் காலாண்டில் தொடா்ந்து வளா்ச்சி போக்கில் பதிவான போதும், வருடாந்திர அடிப்படையில் மந்தநிலையில் பதிவாகியுள்ளது.

உலக வா்த்தகம் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிலையானதாக இருக்கும். ஆனால், அதிகரித்து வரும் புவிசாா் பொருளாதார பதற்றங்கள், உலக நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகல், வா்த்தக சச்சரவுகள் உள்ளிட்ட காரணிகளால் வரும் காலாண்டுகளில் உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதைக் காட்டுகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவின் வா்த்தகக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் தொடா்ச்சியான புவிசாா் அரசியல் சவால்கள் ஆகியவை உலகளாவிய வா்த்தக வளா்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மகாராஷ்டிர துணை மு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வா் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளாா். பாஜக வெல்லாத இடங்களில் மக்களவைத் தொகுதிக... மேலும் பார்க்க