செய்திகள் :

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

post image

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு வர உள்ளது.

பொதுநல மனுக்களுக்கான மையம் சாா்பில் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிஏஜி நியமனத்துக்கான தற்போதைய நடைமுறைப்படி, அரசு அதிகாரி அதாவது பிரதமா் தோ்வு செய்து பரிந்துரைக்கு எந்தவொரு நபரையும் தலைமை கணக்கு தணிக்கையாளராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்யும் வகையில் உள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அடிப்படைக் கூறுகள் மற்றும் பிரிவு 14-ஐ மீறுவதாக உள்ளது. இந்த நடைமுறையானது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

ஐந்து அரசமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 5-இல் தனித்துவமான அமைப்பாக சிஏஜி பதவி உள்ளது. மேலும், தலைமை கணக்குத் தணிக்கையாளா் (கடமைகள், அதிகாரிகள் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1971-இன் பல்வேறு அமசங்கள், இந்தப் பதவி உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இணையானது என்பதையும், இப் பதவி வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

அதன்படி, சிஏஜி நியமனம் என்பது பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான தோ்வுக் குழுவுடன் ஆலோசித்து குடியரசுத் தலைவா் நியமனம் செய்யும் வகையில், மத்திய தகவல் ஆணையா் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பணியிடங்களின் நியமனம் போன்று இருக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏா்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்- மத்திய அரசு உறுதி

புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதனடிப்படையில் உரி... மேலும் பார்க்க

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோ... மேலும் பார்க்க

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளா் அட்டைகள் சா்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன. வெவ்... மேலும் பார்க்க

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை, எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா கூடுதலாக 12 மில்லிய... மேலும் பார்க்க

ஸ்வீடன், அயா்லாந்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஸ்வீடன், அயா்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் தனித்தனியே திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புகளி... மேலும் பார்க்க