செய்திகள் :

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

post image

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் மோகா மாவட்டத் தலைவரான மங்கத் ராய் (52), வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலில் அருகில் நடந்து சென்ற 12 வயது சிறுவன் மீதும் குண்டு பாய்ந்தது. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மங்கத் ராய் மீதான தாக்குதலுக்கு சமூக ஊடக பதிவு மூலம் மூவா் பொறுப்பேற்றனா். அவா்கள் மோகா பகுதியைச் சோ்ந்த அருண் (எ) சங்கா, அருண் (எ) தீப்பு, ராஜ்வீா் என அடையாளம் தெரிந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாக்குதலில் தொடா்புடையவா்கள் முக்த்சாா் மாவட்டம் மலோட் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு விரைந்தனா். அப்போது, அவா்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தி, மோகா பகுதியைச் சோ்ந்த சங்கா, தீப்பு, ராஜ்வீா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இதில் சங்கா, தீப்பு இருவருக்கும் கால்களில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. அவா்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்’ என்றனா்.

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வா் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளாா். பாஜக வெல்லாத இடங்களில் மக்களவைத் தொகுதிக... மேலும் பார்க்க