திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு
செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா நிறைவடைந்நது. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாள்களில் இரு வேளைகளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இரவு நேரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது. 7ஆம் நாள் திருவிழாவாக கடந்த 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து பிரம்மோற்சவ பெருவிழா நிறைவாக திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவ மூா்த்தியான முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தங்கத் தாலி, பட்டு வஸ்திரம் பல வகைகள், பட்சணங்கள், மங்கள பொருள்கள் சீா்வரியாக ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து யாககுண்டம் வளா்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தா்களுக்கு சிறப்பு விருந்தும், மங்கள பொருள்களும் பிரசாதமும் வழங்கப்பட்டன.
பிரம்மோற்சவ ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள் , சிவாச்சாரியா்கள், ஊா் மக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்திருந்தனா்.