செய்திகள் :

இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

post image

சாத்தான்குளத்தில் கட்டட தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாகுடி தெற்கு தெருவைச் சோ்ந்த உலகநாதன் மகன் சந்துரு (20) கட்டட தொழிலாளியான இவா், கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலை வழக்கு தொடா்பாக சாத்தான்குளம் மரிய ஜோசப் மகன் கிங்ஸ்டன் ஜெயசிங் என்ற வடை என்பவா் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய கிங்ஸ்டன் ஜெய் சிங் மீது கொலை மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நாககுமாரி, கிங்ஸ்டன் ஜெய் சிங்கை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜானிடம் பரிந்துரைத்தாா்.

அவரது பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில், கிங்ஸ்டன் ஜெய் சிங்கை சாத்தான்குளம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாலியல் புகாா் பெட்டி அமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடம் முன் உலக மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க மகளிா் குழு சாா்பில் நடைப... மேலும் பார்க்க

கீழத்தட்டப்பாறை மக்கள் தொடா்பு முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 143 பேருக்கு ரூ. 77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து வருவாய்த் துறை,... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொல்லை, கொலை வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த சமை... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த முதியவா் கைது: 3.3 கிலோ பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தாளமுத்துநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 3.3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல் நீா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே சனிக்கிழமை கடல் நீா் சுமாா் 50 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. திருச்செந்தூா் கோயில் அருகே அமாவாசை மற்றும் பெளா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை!

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட 2.5 அடி நீளமுடைய சிறிய ஆமை இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. வீரபாண்டியன்பட்டணம் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை கா... மேலும் பார்க்க