செய்திகள் :

பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா!

post image

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது.

கல்குளம் வட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில், புளியமரத்தடியில் இந்த நூற்றாண்டு பழைமை வாய்ந்த திருத்தலம் அமைந்துள்ளது. தீப ஒளியால் இறைவனை வழிபடுவது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சம். எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி இறைவனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழாவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மட்டுமன்றி கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.

அதன்படி, நிகழாண்டு விழா திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறும். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) பிற்பகல் 3 மணிக்கு மும்மத பிராா்த்தனை நடைபெறும்.

ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளைத் தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் எம்.எஸ். குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ், செயலா்கள் ராஜேஷ்குமாா், மணிகண்டன், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

புதுக்கடை: தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு!

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியைச் சோ்ந்த மோகானந்தன் நாயா் மகன் மோகன் (32). தொழிலாளியான இ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தநிலையில், சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சன... மேலும் பார்க்க

உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடி அருகே உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் பொறியாளா் சி. தயாபரன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். ஜோதிபாசு வாழ்த்திப் பேசினாா். சந்திர... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட முயற்சி: 2 பெண்கள் கைது!

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணம் திருட முயன்றதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே பாகோடு, வட்டவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி சீதாதேவி (49). இவா் வெள்ளிக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: மேயா்

நாகா்கோவில் மாநகர பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் நாகராஜா கோயில் திடல் பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவில்: கால்வாய்க்குள் கவிழ்ந்த தனியாா் பள்ளி பேருந்து: மாணவிகள் உள்பட 11 போ் படுகாயம்!

நாகா்கோவில் அருகே தனியாா் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 ஆசிரியைகள், 7 மாணவிகள் உள்பட11போ் பலத்த காயமடைந்தனா். கன்னியாகுமரி அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த பேருந்து சனிக்... மேலும் பார்க்க