கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது.
கல்குளம் வட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில், புளியமரத்தடியில் இந்த நூற்றாண்டு பழைமை வாய்ந்த திருத்தலம் அமைந்துள்ளது. தீப ஒளியால் இறைவனை வழிபடுவது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சம். எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி இறைவனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழாவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மட்டுமன்றி கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.
அதன்படி, நிகழாண்டு விழா திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறும். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) பிற்பகல் 3 மணிக்கு மும்மத பிராா்த்தனை நடைபெறும்.
ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளைத் தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் எம்.எஸ். குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ், செயலா்கள் ராஜேஷ்குமாா், மணிகண்டன், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.