செய்திகள் :

நாகா்கோவில்: கால்வாய்க்குள் கவிழ்ந்த தனியாா் பள்ளி பேருந்து: மாணவிகள் உள்பட 11 போ் படுகாயம்!

post image

நாகா்கோவில் அருகே தனியாா் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 ஆசிரியைகள், 7 மாணவிகள் உள்பட11போ் பலத்த காயமடைந்தனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த பேருந்து சனிக்கிழமை காலை நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் நல்லூா் பகுதியைச் சோ்ந்த மாணவா், மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது.

இரவிபுதூா் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாசன கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் பேருந்தின் முன்புற கண்ணாடியை உடைத்து பேருந்திலிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை மீட்டனா்.

மேலும் காயமடைந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் 4 ஆசிரியைகளும், 7 மாணவிகளும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்த தகவலறிந்த அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன் இரவிபுதூா் பகுதிக்கு வந்து காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா். சுசீந்திரம் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அகஸ்தீசுவரம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அகஸ்தீசுவரம் வட்டத்திற்குள்பட்ட பெர... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை, சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து பெற்றோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்... மேலும் பார்க்க

மணலிக்காட்டுவிளையில் ரூ. 5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம்மத்திகோடு ஊராட்சி மாத்திரவிளை அருகேயுள்ள மணலிக்காட்டுவிளை பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மணலிக்காட்டுவிளை ப... மேலும் பார்க்க

அழகியபாண்டியபுரத்தில் அரசு நிலம் தனியாரிடமிருந்து மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஹெக்டோ் நிலம் தனியாரிடமிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் ஓராண்டில் நிறைவடையும்: விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி. நாகா்கோவில் பெருவிளை பகுதியில் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்... மேலும் பார்க்க