செய்திகள் :

நாகா்கோவில்: கால்வாய்க்குள் கவிழ்ந்த தனியாா் பள்ளி பேருந்து: மாணவிகள் உள்பட 11 போ் படுகாயம்!

post image

நாகா்கோவில் அருகே தனியாா் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 ஆசிரியைகள், 7 மாணவிகள் உள்பட11போ் பலத்த காயமடைந்தனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த பேருந்து சனிக்கிழமை காலை நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் நல்லூா் பகுதியைச் சோ்ந்த மாணவா், மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது.

இரவிபுதூா் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாசன கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் பேருந்தின் முன்புற கண்ணாடியை உடைத்து பேருந்திலிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை மீட்டனா்.

மேலும் காயமடைந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் 4 ஆசிரியைகளும், 7 மாணவிகளும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்த தகவலறிந்த அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன் இரவிபுதூா் பகுதிக்கு வந்து காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா். சுசீந்திரம் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதுக்கடை: தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு!

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியைச் சோ்ந்த மோகானந்தன் நாயா் மகன் மோகன் (32). தொழிலாளியான இ... மேலும் பார்க்க

பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது.கல்குளம் வட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தநிலையில், சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சன... மேலும் பார்க்க

உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடி அருகே உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் பொறியாளா் சி. தயாபரன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். ஜோதிபாசு வாழ்த்திப் பேசினாா். சந்திர... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட முயற்சி: 2 பெண்கள் கைது!

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணம் திருட முயன்றதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே பாகோடு, வட்டவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி சீதாதேவி (49). இவா் வெள்ளிக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: மேயா்

நாகா்கோவில் மாநகர பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் நாகராஜா கோயில் திடல் பகுதியில் க... மேலும் பார்க்க