செய்திகள் :

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

post image

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அமன் புத்ரா சந்த் கான் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று அவரை நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்புக்கு உடன் வந்த போலீஸ் ஒருவரின் துப்பாக்கியை எடுத்த அந்த நபர் தப்பித்துச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதில் போலீஸ் ஜீப் சேதமடைந்தது .

இதையும் படிக்க | ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து

இதுகுறித்து ஹத்ராஸ் எஸ்பி கூறுகையில், “நேற்று இரவு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் முன்பு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று அனுமதி கேட்டுச் சென்றார்.

திடீரென பாதுகாப்புக்கு வந்த போலீஸின் துப்பாக்கியை எடுத்துத் தப்பிக்க முயன்றார். எங்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அந்த நபரை நாங்கள் திருப்பிச் சுட்டதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவமனையில் குற்றவாளி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் போலீஸார் தெரிவித்தனர்.

கொல்கத்தா வழக்கு: மாணவியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில், புதிய சிபிஐ விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்... மேலும் பார்க்க

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா். இந்த மாணவயின் சகோதரா்களை... மேலும் பார்க்க

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு!

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் ப... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியத... மேலும் பார்க்க