செய்திகள் :

தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு: 6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!

post image

மத்திய பிரதேசத்தில் 6 மாதக் குழந்தையை தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 13ல் கோலாரஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றது. சிவபுரி பகுதியில் தம்பதியர் ஒருவருக்கு ஆண் குழந்தைப் பிறந்ததிருந்தது. ஆறு மாதக் குழந்தை சில நாள்களாக அசௌகரியமாக இருந்ததாகவும், பயந்தது பயந்து எழுவதாகவும் பெற்றோர் மந்திரவாதி ரகுவீர் தகாத் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தாந்திரீக குருவான ரகுவீர் குழந்தைகளுக்கு சில சடங்குகளைச் செய்தார். அந்த சடங்கில் நெருப்பை மூட்டி ஆறு மாதக் குழந்தையை தலைகீழாகத் தொடங்கவிட்டுள்ளார். இந்த சடங்கில் குழந்தை பயங்கர கூச்சலிட்டு அழுதுள்ளது. சடங்கிற்குப் பிறகு குழந்தை குணமடைந்துவிடும் என பெற்றோர் சகித்துக்கொண்டனர்.

ஒருகட்டத்தில் குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு, பயந்துபோன பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர் காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தையின் கண்கள் மோசமடைந்த நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். குழந்தைக்குப் பார்வை மீட்கப்படுமா என்பதில் பெரும் சவாலாகவே உள்ளது.

இந்த விஷயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த ஜான்வேத் பரிஹார் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 72 மணி நேரத்திற்குப் பிறகுதான் குழந்தைக்குப் பார்வை மீண்டும் கிடைக்குமா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று என்று கண் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹிந்தியையும் மாநில மொழிகளையும் மையப்படுத்தி தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசியக் கல்விக் கொ... மேலும் பார்க்க

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!

குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவன் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் ரக்‌ஷித் சௌரசியா (20). இவர் நேற்று முன்த... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: விசாரணையில் அடித்து துன்புறுத்தப்பட்டேன்! -நடிகை ரன்யா ராவ்

தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடு... மேலும் பார்க்க

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு... மேலும் பார்க்க

பஞ்சாபில் கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டு வீச்சு

அமிர்தசரஸில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயில் மீது சனிக்கிழமை அதிகாலை இரு... மேலும் பார்க்க

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது.... மேலும் பார்க்க