செய்திகள் :

தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன்!

post image

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 44 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நாட் ஷிவர் பிரண்ட் 30 ரன்களும், அமன்ஜோத் கௌர் 14 ரன்களும் எடுத்தனர்.

பின்னர், 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தில்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், மும்பை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

தில்லி அணியில் அதிகபட்சமாக மரிசான்னே காப் 40 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்று வரும் இறுத... மேலும் பார்க்க

நான் எதுவும் அறிவிக்கவில்லை; ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் நான் வெளியிடப்போவதில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல ஆண... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுக... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் எனக் கூறப்படுகிறது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளத... மேலும் பார்க்க

நடிகர் அஜித் வழியில் கோலி? கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன?

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன? என்ற சுவாரசிய தகவலைப் பகிர்ந்திருக்கிறார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி) அணிக்காக விளையாடுவதற்காக பெங்களூரு சென்... மேலும் பார்க்க

“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பதற்றமாக இருந்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பிய... மேலும் பார்க்க