செய்திகள் :

நான் எதுவும் அறிவிக்கவில்லை; ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

post image

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் நான் வெளியிடப்போவதில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?

பதற்றம் வேண்டாம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்ற செய்தி பரவியது. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, நான் தற்போது ஓய்வை அறிவிக்கப் போவதில்லை என ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரோஹித் சர்மா.

இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறி ஓய்வு குறித்த வதந்திகளுக்கு விராட் கோலியும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க:“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

இது தொடர்பாக ஆர்சிபி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்கப் போவதில்லை. தற்போது எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் உள்ளவரையில் தொடர்ந்து விளையாடுவேன். நான் எந்த ஒரு சாதனைக்காகவும் விளையாடவில்லை என்றார்.

தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன்!

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டி... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்று வரும் இறுத... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுக... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் எனக் கூறப்படுகிறது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளத... மேலும் பார்க்க

நடிகர் அஜித் வழியில் கோலி? கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன?

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன? என்ற சுவாரசிய தகவலைப் பகிர்ந்திருக்கிறார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி) அணிக்காக விளையாடுவதற்காக பெங்களூரு சென்... மேலும் பார்க்க

“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பதற்றமாக இருந்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பிய... மேலும் பார்க்க