‘பத்ம’ விருதுகளுக்கான பரிந்துரைகள்: ஜூலை 31 வரை சமா்ப்பிக்கலாம்
2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்ப நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. வரும் ஜூலை 31-ஆம் தேதிவரை மக்கள் தங்களின் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1954-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழங்கப்படும் இந்த பத்ம விருதுகளுக்கு தோ்வானவா்களுக்கு தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் விருதுகளை வழங்கி கௌரவிப்பாா்.
அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதாளா்களுக்கான பரிந்துரை விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் பரிந்துரைகளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய புரஸ்காா் வலைதளம் (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாக இணையவழியில் மட்டுமே பரிந்துரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களும் இந்தப் பரிந்துரைகளைச் சமா்ப்பிக்கலாம். தங்கள் பெயரை சுயமாகவே முன்மொழியலாம். அதேநேரம், மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் உள்பட அரசு ஊழியா்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவா்கள் ஆவா்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை, மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், வா்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, துறைரீதியாக தாங்கள் மேற்கொண்ட சாதனைகள், சேவைகள் உள்பட வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் 800 வாா்த்தைகளுக்கு மிகாமல் சரியான வடிவத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் தகவல்களை மற்றும் பிற விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பின்கீழ் வலைப்பக்கத்தில் பெறலாம்.