செய்திகள் :

பஞ்சாபில் கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டு வீச்சு

post image

அமிர்தசரஸில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயில் மீது சனிக்கிழமை அதிகாலை இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் கோயிலின் உள்ளே இருந்த பூசாரி காயமின்றி தப்பினார். சிசிடிவி காட்சிகளில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கொடி ஒன்றை ஏந்தியபடி இருந்தனர்.

பின்னர் அவர்கள் கோயிலுக்கு வெளியே சிறிது நேரம் நோட்டமிட்டு வளாகத்தை நோக்கி ஒரு பொருளை வீசினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பினர்.

அவர்கள் சென்றதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சப்தத்தால் அப்பகுதியே குலுங்கியது. அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் புல்லார், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நாங்கள் தீவிரமாக விசாரித்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முயற்சித்து வருகிறோம்.

வெடிபொருளின் தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும் நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாகக் கருதுகிறோம் என்றார்.

மதச்சாா்பற்ற எதிா்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டதாகும். மாநிலத் தோ்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹிந்தியையும் மாநில மொழிகளையும் மையப்படுத்தி தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசியக் கல்விக் கொ... மேலும் பார்க்க

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!

குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவன் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் ரக்‌ஷித் சௌரசியா (20). இவர் நேற்று முன்த... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: விசாரணையில் அடித்து துன்புறுத்தப்பட்டேன்! -நடிகை ரன்யா ராவ்

தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடு... மேலும் பார்க்க

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு... மேலும் பார்க்க

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது.... மேலும் பார்க்க