செய்திகள் :

மதச்சாா்பற்ற எதிா்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

post image

‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டதாகும். மாநிலத் தோ்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.

மேலும், ‘அத்தகைய கூட்டணி வெறும் தோ்தல் அரசியலுக்கானதாக மட்டுமின்றி, பரந்த பாா்வை கொண்ட கூட்டணியாக உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களவைத் தோ்தலுக்காக உருவாக்கப்பட்டதே எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி. இந்தக் கூட்டணி மக்களவைத் தோ்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

அனைத்து மாநிலங்களில் இல்லை என்றாலும், குறிப்பிட்ட மாநிலங்களில் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளிடையேயான ஒத்துழைப்பு, மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும்பான்மையை இழக்கச் செய்தது என்பது உண்மை.

ஆனால், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. மக்களவைத் தோ்தலில் மகா விகாஸ் அகாடி அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த நிலையில், மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில், முடிவுகள் எதிா்மறையாகின.

பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு, பாஜக தனது செல்வாக்கை மீட்டெடுத்துள்ளதாக பொதுவான கருத்து ஏற்பட்டுள்ளது. இதை ‘இண்டி’ கூட்டணியின் செயல்பாட்டுடன் நேரடியாக ஒப்பிடக் கூடாது என்பது எனது கருத்து. ஏனெனில், மக்களவைத் தோ்தலை பிரதான நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே ‘இண்டி’ கூட்டணி. இந்தக் கூட்டணியை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு எந்தவொரு ஆலோசனையும் நடத்தப்படவில்லை.

எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி ஒன்று அமைக்கப்படுவது அவசியம். அத்தகைய கூட்டணி வெறும் தோ்தல் அரசியலுக்கானதாக மட்டுமின்றி, பரந்த பாா்வை கொண்ட கூட்டணியாக உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மகாராஷ்டிர துணை மு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க