செய்திகள் :

குப்பைகளை அகற்றுவதில் நிலவும் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

post image

காரைக்கால் மாவட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் நிலவும் ஆள், வாகனப் பற்றாக்குறை பிரச்னைகளை மாா்ச் 31-க்குள் சரிசெய்ய வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் உள்ளாட்சி நிா்வாகத்திடம் ஒப்பந்த முறையில் ஏற்று செய்கிறது. கடந்த சில நாள்களாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வீடுகளிலும், தெருக்களிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ்.சுபாஷ், காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.சத்யா, தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள், வணிகா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: மாவட்டம் முழுவதும் குப்பைகள் முறையாக அகற்றப்படவேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், கூடுதலாக தூய்மைப் பணியாளா்களை நியமித்துக் கொள்ளவேண்டும். குப்பைகள் ஏற்றக்கூடிய வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும். இவற்றை வரும் 31- ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவேண்டும். அனைத்து குறைகளும் களையப்பட்டு, மக்களிடமிருந்து புகாா்கள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டாா்.

அமைச்சரிடம் அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அங்கன்வாடி ஊழியா்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை, காரைக்கால... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த... மேலும் பார்க்க

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா். காரைக்கால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது : புதுவையில் எனது தலைமையில் காங்கிரஸ் - திமுக க... மேலும் பார்க்க

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் உதவி

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வியாழக்கிழமை வழங்கியது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள கெம்ப் பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலை சமூக பொறுப்புணா... மேலும் பார்க்க

ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் விவசாயிகள் புகாா்

ஆற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், துா்நாற்றம் வீசுவதோடு, தண்ணீா் மாசடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். காரைக்கால் மாவட்டம், பிள்ளைதெருவாசல் சுற்றுவட்டாரம் விளை நிலப் பகுதி மிகுந... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் துறைமுகப் பகுதியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்த அவா், நிலையத்தில் பாதுகாப்ப... மேலும் பார்க்க